Wednesday 30 December 2015

குஞ்சுப்பிள்ளையும் குட்டிப்பூனையும், Dr.K.S.Srinivasan speech kothen




Wed, 22 Jul 2015, 6:24 AM - Murali Castro: குஞ்சுப்பிள்ளையும்
குட்டிப்பூனையும்

    என்னிடம் குஞ்சுப்பிள்ளை
அடிக்கடி வருவாள்.
’’மாமா எனக்கு முட்டாய்
மருந்து கொடு’’
பிள்ளைகள் தனக்கு எது
வேண்டுமோ அதைக்கேட்க
எப்போதும் தயங்கியதில்லை.
’’ உனக்கு என்ன பண்ணுது
குஞ்சுபிள்ள’’
’’ தலவலி, காச்சலு, பல்லுவலி,
காலுவலி  ’’
எல்லாநோய்களும் தனக்கு
இருப்பதாய் சொல்வாள். ஒரு
கள்ளச்சிரிப்பு முகம் எங்கும்
விரவிக்கிடக்கும்.
இவளுக்கு கொஞ்சம் ’’ இனிப்பு
’’வேண்டும். அதுவும்
இலவசமாய் கிடைக்கும் போது
ஒரு பொய் சொன்னால்
பரவாயில்லை. பிள்ளைகள்
பெரியவர்களிடம் இருந்து
முதலில் பொய் சொல்ல
கற்றுக்கொள்கிறார்கள்.
நான் கொஞ்சம் சிறப்பு
மருந்தை கொடுத்து
அனுப்புவேன். பதுமை மாதிரி
திரும்புவாள்.
ஒரு நாள் ஒரு
குட்டிப்பூனையோடு வந்தாள்
பூனை
இளைத்துப்போயிருந்தது,
கண்கள் உள்ளடங்கி, வயிறு
சுண்டி முடிகள் அங்காங்கே
பெயர்ந்து திட்டுதிட்டாய்
இருந்தது.
பூனையைப்பற்றிய கவலை
பிள்ளையின் முகம் எங்கும்
படர்ந்திருந்தது. முகத்தில்
களையில்லை
’’என்னாச்சு பாப்பா ’’
’’ எனக்கு மருந்து வேண்டாம்
இந்த பூனையை பாருங்க ’’
’’ பூனைக்கு என்ன பன்னுது
குட்டி ’’
’’சாப்பிடுல ’’
’’சரி’’
’’ சும்மா படுத்துகிட்சு ’’
’’சரி’’
இதிலிருந்து வேறு
எந்தமுடிவுக்கு போவது ?
எனக்கு இன்னும் தகவல்
தேவையாய் இருந்தது.
’’அப்புறம் என்ன நடந்தது
சொல்லு குஞ்சு ’’
’’ ம்ம் அப்புறம் ’’
’’’ தம்பி பூனை அண்ணா பூனை
ரண்டும் சண்டை சண்டை
போட்டுச்சு ’’
’’ஒகோ ’’
’’அதிலிருந்து
இப்பிடியாயிடுச்சு’’
என்ன செய்வது பெண்ணே! நம்
நாட்டில் எல்லா தம்பிகளும்
பொறுப்பில்லாத தறுதலையாக
வந்து வாய்த்திருக்கிறார்கள்.
இந்த முட்டாள் அண்ணன்கள்
வருத்தப்பட்டு பாரம்
சுமக்கிறார்கள்.
குஞ்சுபிள்ளையையும்
குட்டிப்பூனையையும் ஒரு
சேர குணப்படுத்த வேண்டி
இருக்கிறது.
நான் nat-mur 200  கொடுத்து
அனுப்பினேன்.
பத்து நாள் சென்று
பரிட்சைகளெலலாம் கழித்து
வந்தாள். முகம் பூரித்து
இருந்தது . நான் பூனையைப்
பற்றி எதுவும் கேட்கவில்லை.
முகம் குறிப்பதை விடவா, வாய்
சொல்ல வேண்டும்.!!
பிறகு அடிக்கடி என்னை
பார்க்க வருவாள். முட்டாய்
மருந்து வாங்க மட்டுமல்ல.
நான் துயரர்களுக்கு மருந்து
மடித்து கொடுக்கும் போது
என்னையும் முந்திக்கொண்டு
சொல்வாள்-
’’ நல்லா சப்பி சாப்பிடுங்க
துயரர் முகத்தில் வெட்கமும்
சிரிப்பும் கலந்திருக்கும்.
ஒரு உப்பு மருந்து எனக்கு ஒரு
நல்ல தோழியை
கொடுத்திருக்கிறது.-
அவளுக்கு நானும்; அவள்
எனக்கும் கற்றுக்கொள்ள
வேண்டியது நிறைய
இருக்கிறது.
[பிப்ரவரி 2002 ல் ஹோமியோ
நண்பன் இதழில் நான் எழுதிய
கட்டுரையை உங்களோடு
பகிர்ந்து கொள்கிறேன் ]
govindaraj

Wed, 22 Jul 2015, 7:09 AM - Murali Castro: தான் ஒரு முக்கியமான அரசியல்வாதி,;
டிப்ளமட், தேசிய அரசியலில் அல்லது
உலக அரசியலில் தன் செயல்பாடு
முக்கியமானது, எனவே தனது எதிரிகள்
தன்னைக் கொல்ல சதி தீட்டுகிறார்கள்,
என்ற சிந்தனை ஒரு வீ..பி மனதில்
தோன்றிவிட்டால், அவருக்குள்ளிருக
்கும் அச்சத்தை அவர் வெளிப்படையாகக்
கூட்டாளிகளிடமும், பொதுக்
கூட்டங்களிலும் பேசவும் செய்யும்
போது அவருக்கு ப்ளம்பம் மெட் என்கிற
மருந்தைக் கொடுக்கலாம் எனப்
பரிந்துரைக்கிறது ஹோமியோபதி
அறிவியல். உயர்ந்த வீரியங்களில்
கொடுப்பது மிகவும் நல்லது.
மரு.இரவிச்சந்திரன
சென்னை

Wed, 22 Jul 2015, 8:14 AM - Sivakumuran Dr: My Master's speech at kothen;


I will tell how homeopathy made me from a frail, puny, youth to a healthy person. And how my interest in studying the source books mad e me learn German, as well as the joy of reading the source material and the contemporary German journals. I still practice "orthodox" homœopathy, i.e. I do not use any software, and I do not use the computer to repertorise with tens of rubrics.


Homeopathy is community medicine and is needed to be used more often among the economically poor and needy. It should be the people’s medicine and should not be let to be high-jacked by big hospitals and high-tech promoters, nor should it be dependent on instruments. 

Homœopathy is complete and does not need any "modernisation" or "innovation".

 We should not fight shy of the terminology fundamentalist; the word by itself is alright, even if it is perverted as a smear word. No need to bend backward to place "evidences" acceptable to the scientific school.

 "Restore the sick to health" - that is the only calling.    

                                   ---- this is the speech of my Master

 Dr.K.S.Srinivasan at international hahnemann congress, held on 27-29 september 2007 at kothen, Germany.

No comments:

Post a Comment