Wednesday 30 December 2015

ஆர்கனான் மணிமொழி-8, சாக்ரடீஸும் கோனியமும்

Fri, 24 Jul 2015, 6:30 AM - Murali Castro: தினம் ஒரு
ஆர்கனான் மணிமொழி-8
§ 8
It is not conceivable, nor can it be proved by any
experience in the world, that, after removal of all the
symptoms of the disease and of the entire collection of
the perceptible phenomena, there should or could
remain anything else besides health, or that the morbid
alteration in the interior could remain uneradicated.1
1 When a patient has been cured of his disease by a
true physician, in such a manner that no trace of the
disease, no morbid symptom, remains, and all the signs
of health have permanently returned, how can anyone,
without offering an insult to common sense, affirm in
such an individual the whole bodily disease still remains
interior? And yet the chief of the old school, Hufeland,
asserts this in the following words: Homoeopathy can
remove symptoms, but the disease remains. (Vide
Homoopathie, p.27, 1, 19.) This he maintains partly
from mortification at the progress made by
homoeopathy to the benefits of mankind, partly because
he still holds thoroughly material notions respecting
disease, which he is still unable to regard as a state of
being of the organism wherein it is dynamically altered
by the morbidly deranged vital force, as an altered state
of health, but he views the disease as a something
material, which after the cure is completed, may still
remain lurking in some corner in the interior of the body,
in order, some day during the most vigorous health, to
burst forth at its pleasure with its material presence! So
dreadful is still the blindness of the old pathology! No
wonder that it could only produce a system of
therapeutics which is solely occupied with scouring out
the poor patient.
நோயின் அனைத்துக்குறிகளும், மற்றும் அறிவால்
உணரக்கூடிய அதன் அனைத்துத் தன்மைகளும் அறவே
நீக்கப்பட்டபின் , அங்கே நலத்தைத் தவிர வேறெதுவும்
இருந்திட முடியாது அல்லது இருந்திடவும் கூடாது அல்லது
உள்ளுக்குள் இருக்கும் அந்த நோய்த்தன்மை அடியோடு
நீக்கப்படாமல் தொடர்ந்து இருக்கிறது*. என்பதை எந்தவொரு
உலக அனுபவத்தினாலும் எண்ணிப்பார்கவோ அல்லது
மெய்பிக்கவோ முடியாது.
*ஒரு துயரர், உண்மையான மருத்துவரால்
நலமாக்கப்பட்டபிறகு , அவரின் உடலில் நோயின் எந்தத்
தடையமும், நோயுற்ற குறியும் இல்லாத விதத்தில்
குணமடைந்து , ஆரோக்கியத்தின் அனைத்து
அடையாளங்களும் அவரிடம் நிரந்திரமாக திரும்பி வந்த
பிறகும் , அவரின் உடலைச்சார்ந்த நோய் இன்னமும்
உள்ளுர எஞ்சி இருக்கிறதென்று எவராயினும் கூறினால்,
அது பகுத்தறிவை அவமதித்து விட்டு தானே அவ்வாறு கூற
முடியும்?. அலோபதி மருத்துவத்தைச் சேர்ந்த மூத்த
மருத்துவர் ஹூப்லாண்டு கீழ்க்கண்டவாறு கூறிகிறார்,"
ஹோமியோபதி, நோய்க்குறிகளை வேண்டுமானால் நீக்கலாம்,
ஆனால் அந்த நோய் தொடர்ந்து நீடித்திருக்கும் '. அவர்
இவ்வாறு கூறுவதற்கு காரணம் என்னவென்றால் ,' நோய்
தோன்றுவதற்கு ஸ்தூலமான பருப்பொருள் தான்.காரணம்'
என்று அவர் நம்புவது தான். உயிர் ஆற்றலின் பாதிப்பை ,
ஆற்றல் வடிவிலே (ஹோமியோபதி மருந்துகள் ) சரி செய்து
விட முடியும் என்பதை அவர் ஏற்க மறுப்பதோடு ,'நோய்
என்பது பருப்பொருள் வடிவிலானதே ( நுண்ணுயிரி ) , அது
நோய் குணமான பின்பும் உடலின் ஏதோ ஒரு மூலையில்
ஒட்டிக் கொண்டிருக்கும் , திடிரென்று ஒரு நாள் மீண்டும்
வெடித்துக் கிளம்பும் என்று அவர் கருதுவது தான். இந்த
அச்சந்தருகிற காரணம் அவர்கள் இன்னமும் நம்பும்
உடல்கூறு இயலின் (PATHOLOGY) குருட்டுத்தனமே . இது
(அலோபதி மருத்துவம்), அப்பாவி துயரர்களை முழுவதுமாக
கைப்பற்றியுள்ள நோய் நீக்க நலஞ்சார்ந்த சிகிச்சை முறை
( THERAPEUTICS) என்பதால் இதில் எவ்வித வியப்பும்
இல்லை.
dr.Karuppaiah.


Fri, 24 Jul 2015, 10:55 AM - Balasubramanian: சாக்ரடீஸும் கோனியமும்
பகுத்தறிவின் ஒளியில் மானிடத்தைக்
காண விரும்பி, கிரேக்கத் தெருக்களில்
அலைந்து கொண்டிருந்த ஒரு தத்துவ
ஞானியை சரித்திரத்தின் பதிவுகளில்
நாம் அறிவோம். சாக்ரடீஸுக்கு, ஜன
நாயக அதிகாரத்துவத்தின் பேரில்
தண்டணை வழங்கப்பட்டுஹெம்லாக் விஷம்
கொடுத்து கொல்லப்பட்டார். அவரது
இறுதி நேரங்களின் சிரமங்களை,
அவஸ்தைகளை, ப்ளேட்டோ
பதிந்திருக்கிறார். இக்குறிப்புகள்
மருத்துவ முக்கியத்துவம் கொண்டவை.
ஹெம்லாக் என அழைக்கப்பட்டகோனியம்
மேக்குலேட்டம்எனும் தாவர மருந்தின் ,
எளிமையான ஆரம்பகால மெட்டீரியா
மெடிக்கா தொகுப்பு என
இக்குறிப்புகளை அவதானிக்கலாம்.
ஹோமியோ மருத்துவ அறிவியலில்
கோனியம் மேக்குலேட்டம் ஒரு முக்கிய
மருந்து. நன்கு மெய்ப்பிக்கப்பட்ட ஒன்று.
கோனியத்தின் முக்கியமான
ஆளுமைக்குணங்களில்
குறிப்பிடப்படவேண்டியது அதன்,
எளிதில் மூட நம்பிக்கைக்கு ஆட்படும்
குணம். தான் எப்போதும், இயற்கைக்கு
அப்பாற்பட்ட ஒரு சக்தியின்
ஆளுகைக்குட்பட்டோ, அல்லது, அதோடு
தொடந்து
உரையாடிக்கொண்டிருப்பதோ, அச்சக்தி
குறித்த லயிப்பில் , ஈடுபாட்டில்
இயங்கிக்கொண்டிருபதோ சாத்தியம்..
இது சாக்ரடீஸின் பகுத்தறிவுக்கு நேர்
எதிர் துருவ நிலை . ஹோமியோபதி
அறிவியல் , ஆளுமை பகுப்பாய்வில்,
இவ்வெதிர் துருவ நிலைகளை
எப்போதும் உள்ளடக்கியிருப்பது ஒரு
சிறப்பான அம்சம்.. ”கறுப்பு- வெள்ளை
அடிப்படையில் ஆளுமைகளை
விளக்குவதையும்,விளங்கிக்கொள்வதையும்
தவிர்க்க முடியும். கோனியம் நரம்பியல்
நோய்களிலும், புற்று நோய்களிலும்,
ரத்த அழுத்த நோயிலும் பயன்படும்
முக்கிய மருந்து.

Dr.Ravichandaran

No comments:

Post a Comment