Wednesday 30 December 2015

aphorism 6, astavakra

Wed, 22 Jul 2015, 6:10 AM - Murali Castro: தினம் ஒரு
ஆர்கனான் மணிமொழி-6
§ 6
The unprejudiced observer - well aware of the futility of
transcendental speculations which can receive no
confirmation from experience - be his powers of
penetration ever so great, takes note of nothing in every
individual disease, except the changes in the health of
the body and of the mind (morbid phenomena,
accidents, symptoms) which can be perceived externally
by means of the senses; that is to say, he notices only
the deviations from the former healthy state of the now
diseased individual, which are felt by the patient himself,
remarked by those around him and observed by the
physician. All these perceptible signs represent the
disease in its whole extent, that is, together they form
the true and only conceivable portrait of the disease*.
* I know not, therefore, how it was possible for
physicians at the sick-bed to allow themselves to
suppose that, without most carefully attending to the
symptoms and being guided by them in the treatment,
they ought to seek and could discover, only in the
hidden and unknown interior, what there was to be
cured in the disease, arrogantly and ludicrously
pretending that they could, without paying much
attention to the symptoms, discover the alteration that
had occurred in the invisible interior, and set it to rights
with (unknown!) medicines, and that such a procedure
as this could alone be called radical and rational
treatment.
Is not, then, that which is cognizable by the senses in
diseases through the phenomena it displays, the disease
itself in the eyes of the physician, since he never can see
the spiritual being that produces the disease, the vital
force? Nor is it necessary that he should see it, but only
that he should ascertain its morbid actions, in order that
he may thereby be enabled to cure the disease. What
else will the old school search for in the hidden interior
of the organism, as a prima causa morbid, whilst they
reject as an object of cure and contemptuously despise
the sensible and manifest representation of the disease,
the symptoms, that so plainly address themselves to
us? What else do they wish to cure in disease but
these?
தன் சொந்தக் கருத்திலிருந்து துயரரை
அணுகாத மருத்துவர் ( unprejudiced observer-
முற்சார்பற்ற நுணுகிக்காண்பவர் ) தமது
எல்லை கடந்த ஊகங்களால் நோயைப் பற்றி
உறுதி செய்ய இயலாது என்பதைத் தன்
பட்டறிவினால் உணர்ந்து விழிப்புடன்
செயல் பட வேண்டும். ஒவ்வொரு
தனித்தனி துயரரிடமும் உடல் மற்றும்
மனதில் ஏற்படும் மாற்றங்களைத் தவிர
(நோய்சார்ந்த குறிப்பிடத் தகுந்த ஒன்று,
விபத்துக்கள், துயர்க்குறிகள்)
வேறெதையும் கணக்கில்
எடுத்துக்கொள்ளகூடாது.
ஐம்புலன்களின் துணைகொண்டு
வெளிப்படையாக அறியக்கூடிய இம்
மாறுதல்களைத் தவிர வேறு எதையும்
மருத்துவர் கவனிக்க வேண்டியதில்லை .
துயரரின் முன்பிருந்த நோயற்ற
நிலைக்கும் , தற்போதுள்ள நோயுற்ற
நிலைக்கும் உள்ள மாறுதல்களின்
விபரங்களை துயரர், அவர் அருகில்
இருப்போர் ஆகியோரின்
வாக்குமூலமாகவும் மற்றும்
மருத்துவர் தமது கண்ணோட்டத்தின்
மூலமாகவும் அறிந்து
கொள்ளவேண்டும். இந்தக் குறிப்புகளே
( Signs) துயரின் முழுத் தன்மையையும் ,
உண்மையான உருவத்தையும்
தெரிவிப்பதாக இருக்கின்றது*.
* துயரின் உள்ளார்ந்த அமைப்புகள், உள்
உறுப்புகளுக்குள் அல்லது உயிர்
ஆற்றலில் என்ன நேர்ந்திருக்கிறது
,துயருக்கான காரணம் என்ன என்பதை
மிகக் கவனமாக , குறிகளின்
அடிப்படையில் கண்டு உணராத , அதன்
அடிப்படையில் மருந்து தேர்வு
செய்யாதவர்கள் சரியான மருந்தைத்
தேர்வு செய்வதாகச் சொல்வது வீம்பு
மிக்கதாகவும் , கேலிக்குரிய
வகையிலும் மற்றும் பாசாங்கு
செய்வதாகும். அப்படிப்பட்ட ஒரு
மருத்துவ முறையை பழமையானது
என்றும் பகுத்தறிவுக்கு உட்பட்டது
என்றும் எவ்வாறு
கூறிக்கொள்ளமுடியும்.
ஐம்புலன்களால் அறிந்து கொள்ள
இயலாத , நோயைத் தோற்றுவிக்கிற
ஆற்றல் உள்ள ஒன்றை -அதாவது உயிர்
ஆற்றலை அறிய முற்படுவதை
விட்டுவிட்டு புலன்களால் அறிந்து
கொள்ளக்கூடிய , அது
வெளிப்படுத்துகின்ற நோய்த்
தன்மையை மட்டுமே உணர்ந்து மருந்து
கொடுத்தால் தான் நோயைக் குணமாக்க
முடியும். அதை விட்டுவிட்டு பழைய
மருத்துவ முறையைச் சேர்ந்தவர்கள், (Old
school-Allopathy system) ஓர் உயிரியிடத்தில்
மறைந்திருக்கும் உட்புலன்களில் என்ன
தேடிக் கண்டுபிடிக்க முயற்சி
செய்கிறார்கள் . நோயின்
பிரதிநிதிகளாக வெளிப்படும் குறிகள்
அல்லாது வேறு எதனைக் கொண்டு
நலமாக்க இயலும்?.
dr.Karuppaiah.


Wed, 22 Jul 2015, 6:19 AM - Murali Castro: அஷ்டாவக்கிரனின் ஒவ்வொரு உடல்
திருகலுக்கும் யார் காரணம்? சனகனின்
அவையில் ,சமய சம்வாதத்தில்
தோற்றுப்போன அவன் தந்தையா?
அல்லது அவரைத்தோற்கடித்த
ஞானிகளா? உலகிலேயே
பாதுகாப்பான இடம் கருவறை என நாம்
எண்ணிக்கொண்டிருக்க,
கருவறையிலேயே, தந்தையின்
தோல்விகளால் எட்டுத்
திரிபுகளுக்குள்ளானவன்
அஷ்டாவக்கிரன். பல தலைமுறைகளின்
கெட்டித்துப்போன, சட்டகமான ஆளும்
கருத்தாக்கங்களே காரணம் எனப்
புரிகிறது. பழந்த் திரிபு வாதங்கள்-
உடல் , மனம் எல்லாவற்றிலும் புதுத்
திரிபுகளை உருவாக்குகிறது.
பழம்புனிதக் கண்ணாடியைக்
கழற்றிவிட்டுப் பார்த்தால்,வளர்
ச்சியற்றுக், குறுக்கப்பட்டு விளைந்த
ஒரு பான்ஸாய் தலைமுறை, அடுத்த
தலைமுறையைக் கருவிலேயே
வக்கிரப்படுத்தி, திருகல்களை
உருவாக்கிவிடும் சாத்தியப்பாடுதா
னே அஷ்டாவக்கிரன்.!
இதை எந்த மியாஸத்தில்
வகைப்படுத்துவது? ஸைக்கொ
சிஃபிலிடிக் தொடர்மம் தானே? இரு
நூற்றாண்டுகளாய் இத்தகைய உடல்,மனப்
பிறழ்வுகளை , தேக்கத்தை, நீண்டகால
நோயுறுதலை, ஹோமியோபதி
மியாஸக் கோட்பாட்டில் தானே
விளக்கிவருகிறது!
ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த
தலைமுறைக்கு ஆளும் அதிகார வர்க்கக்
கருத்தாக்கங்கள், ஜீவித நியாயஙகளோடு,
கடத்தப்படுத்தப்படுவதை
ஏற்றுக்கொண்டால், பரிணாமவியல்
அறிஞர் ரிச்சர்ட் டாக்கின்ஸின்மீம்ஸ்
பயன்பாட்டுக் கொள்கை
பொருத்தப்பாடுடையதென்றால்,,
நிச்சயம் ஒரு அமளி chaos
உருவாகும்தானே?
மீம்ஸ்ஞானக் கடத்திகள் எனச்
சொல்லப்பட்டதன் எதிர்மறையா? திரிபா?
அல்லது, இன்றைய சமூக அமைதி
குலைக்கும், சமூக மனிதனை
பிளவுண்ட ஆளுமையாக்கி
அலைக்கழிக்கும், கருத்துலக
அதிகாரத்தின் மாயக் கண்ணிகளா?
சமகாலக் கலையும் இலக்கியமும்,
இந்நிலையை பேசுபொருளாக்கிய
ிருக்கிறதா?
எழுத்தாளர் ஆதவன் மிகச் சுலபமாக
எழுதிப் போவார். ” விரயமாவது
சக்தியின் இயல்பேஎன்று!
எண்ட்ரோபியை வேறு யாரால்
இவ்வளவு எளிதாய்ச் சொல்லிவிட
முடியும். மெக்ஸிகன்
ஹோமியோபதியர் பீ. எஸ். ஆர்ட்டேகா
மியாஸம் கருதுகோளை, தலைமுறை
தாண்டி நிகழும், அமளி, -”
உயிராற்றலின் விரயம்என்றே
விளக்குகிறார். இவ்விரயத்தை
எதிர்கொண்டால்தான் மேம்பட்ட
உயிராற்றல் கொண்ட- மியாஸத்தின்
தாக்கத்தை, அமளியை விரயத்தை
சுலபமாக வெற்றிகொள்ளும் திறன்
படைத்த (new eugenics) அடுத்த தலைமுறை
உருவாகும் என்றும் கூறுவார்.!
கருத்துரு- எதிர் கருத்துரு-சங்கமம்
என வளர்ச்சியின் இயங்கியல் படி
நிலைகளை விளக்கும், ஹெகலிய-
மார்க்ஸிய சங்கிலித்தொடரில் மீம்ஸ்
எல்லாப் படி நிலைகளிலும் இயக்கம்
காட்டுவது அவதானிக்க்கூடியது
தானே?
ஸைக்கோ-சிஃபிலிடிக் கழுத்துச்
சுருக்கை அறுத்தெறிந்து,
அமளியிலிருந்து விடுதலை நோக்கிப்
பயணிக்கும் புரொமீதஸ் தலைமுறை
எப்படி/எப்போது வரும்.? வரவேற்றுப்பாட

ஷெல்லிகள் இருப்பார்களா? .

No comments:

Post a Comment