Monday 13 February 2017

ஹோமியோபதி - ஒரு புதிய பார்வை பழ.வெள்ளைச்சாமி

ஹோமியோபதி - ஒரு புதிய பார்வை

PAZHA.VELLAICHAMY

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஜான்ஸ்கால்ட்டன் ஹோமியோபதிக்குச் செய்து வரும் பணி மிகச் சிறப்பானது.
அவர் தாம் எழுதிய இரண்டு  புத்தகங்களிலும்  (1 .HOMOEOPATHY AND MINERALS. 2.HOMOEOPATHY AND ELEMENTS).  தனிமங்களின் அணு எண்படியான பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, மனிதனுடைய பல்வேறு நிலைகளை, கருவுற்றதிலிருந்து அவன் அந்திமக் காலம் வரை விவரித்துள்ளார்.  ஒவ்வொரு நிலையும் தனியானது போல் தோன்றினாலும் அது தனியானது அல்ல.  அது அடுத்து வரும் நிலையால் மறுக்கப்பட்டு அது அறாத் தொடர்ச்சியாக ஏழு நிலைகளை மனித வாழ்வு எய்துவதைச் சிறப்பாகக் கூறியுள்ளார்.
.
.
தனிமங்களுக்கும், மனித வாழ்வுக்கும் உள்ள உறவை அவர் தனிமங்களின் அணு எண். அடிப்படையில் ஆய்வு செய்து கூறியிருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது.  அதன் சிறப்பை மேலும் அறிந்து கொள்ள இன்னும் ஆழமாக தனிமங்களின் வேதியியலைப் படிக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தாமல் வலியுறுத்துகிறார்.
.
     இவ்விரு புத்தக்கங்களையும் எழுதுவதற்கு தனிமங்களைப் பற்றியும், மனித வாழ்வைப் பற்றியும் மிகவும் ஆழமாகப் பரிசீலித்துள்ளார்.  ஆனால், அந்த ஆய்வு போதியளவு விளக்கப்படவில்லை.  அதனால், அவர் ஆய்வு முறை பலருக்குக் குழப்பத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இருப்பினும், இவ்விரு புத்தகங்களின் பயன் மிகச் சிறப்பாக உள்ளது.
ஹோமியோபதியில் நோய்க்கு மருந்தல்ல.  மனிதனுக்குத்தான் மருந்து என்று கூறுகிறோம்.  அதனால், ஒவ்வொரு மனிதனிடத்திலும் குணப்படுத்த வேண்டியது எது என்பதையும், அதே போல், ஒவ்வொரு மருந்திலும் குணப்படுத்துவது எது என்பதையும் அறிய விழைகிறோம்.
மேற்கூறியபடிதான் டாக்டர் ஹானிமன் முதல் இன்று வரை  தூய  ஹோமியோபதியைச் செய்பவர்கள்    செய்து வருகிறார்கள்.  அவர்கள் அனைவரும் ஒவ்வொரு மருந்தையும் ஒரு செயற்கை நோயாளராகப் பார்த்தார்கள்.  ஒவ்வொன்றின் தனித்துவத்தின் அடிப்படையில் அவைகள் வேறுபடுத்தி பார்க்கப்பட்டன.
.
ஆனால், ஸ்கால்ட்டன் அவர்கள் யாரும் இதுகாறும் பார்க்காத புதிய கோணத்தில் மருந்துகளைப் பார்க்கிறார்.  ஒவ்வொரு மருந்தையும் ஒவ்வொரு மனிதனாகப் பார்க்கிறார்.  ஒவ்வொரு மனிதனும் தனித் தன்மையானவன்தான் என்றாலும், அந்தத் தனித் தன்மை கூட திடீரென்று தோன்றிது இல்லை.  அது மனித உறவுகளைச் சார்ந்தது என்பதையும் மனித உறவுகளில் ஏற்பட்ட முரண்பாடுகளின் விளை பொருள்கள்தான் என்பதையும் மிகவும் சரியாக உள்வாங்கி எழுதியுள்ளார்.
அவர், அதனால் ஒவ்வொரு மனிதனையும் தனி மனிதனாக மட்டும் பார்க்காமல் குடும்பம், சமூகம் சார்ந்தவனாகப் பார்க்கிறார்.  எந்த ஒரு மனிதனும் தனியாக வாழ முடியாது என்பதையும், அவனுடைய வாழ்நிலை அவனால் மட்டும் தீர்மானிக்கப்படவில்லை என்பதையும், அது சமூக உறவுகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் மிகச் சரியாகப் பரிசீலித்து இருக்கிறார்.
.
ஒரு மனிதனுடைய மனமானது ஒவ்வொரு மனிதனுக்கும் திடீரென்று வந்ததாகவோ அல்லது பிரபஞ்ச மனத்திலிருந்து வந்ததாகவோ கருதப்படுவதைப் புறக்கணிக்கும் வண்ணம், ஒவ்வொருவருடைய மனமும் அவனுக்குள் உள்ள அக முரண்பாடுகளின் விளைவாகவும், அவனுக்கும், பொருளியல், அரசியல்  சார்ந்து குடும்ப, சமூக உறவுகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாகவும் தோன்றியது தான்  என்பதை மிகச் சரியாகப் புரிந்துள்ளார்.
.
எனவே, ஒரு தனிமனிதனைப் புரிந்து கொள்ள அவனை மட்டும் புரிந்து கொண்டால் போதாது.  அவன் குடும்பத்தை, அவன் வாழும் சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.  அவனுக்கும், அவன் குடும்பத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் அவனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் புரிந்து கொண்டு, அந்த முரண்பாடுகளின் விளைவாக அவன் மன நிலையில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் அவனைத் தனித்துவப்படுத்திப் பார்க்க வேண்டிய அவசியத்தை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.
.
அவர்மருந்துகளை
அன்னையாக,
தந்தையாக,
பிள்ளைகளாக,
சகோதர - சகோதரிகளாக,
நன்பர்களாக,
தொழிலாளியாக,
கலைஞனாக,
அறிஞனாக,
தலைவனாக
மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினராகவும் பார்க்கிறார்.
ஏனெனில் மனிதன் சமூக விலங்கு என்பதை உணர்ந்துள்ளார்.
ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள அவனைத் தனியாகப் பார்க்க முடியாது.  அவனுக்கும்- குடும்பத்திற்கும்,
அவனுக்கும்-சமுகத்திற்கும்,
அவனுக்கும்-தொழிலுக்கும்,
அவனுக்கும்-கலைப் படைப்புகளுக்கும்,
அவனுக்கும்-ஆளுமைக்கும்
உள்ள தொடர்பை அறிந்து கொள்ளாமல் அவனைப் புரிந்து கொள்ள முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்துள்ளார்.
.
அவர் ஓர் உண்மையைச் சொல்லுகிறார்.  ஒரு அலோபதி மருத்துவருக்கு நோய்க் கூறு இயலையும், நுண்ணுயிரி இயலையு எவ்வளவு ஆழமாகப் படிக்க வேண்டுமோ அதைவிட ஒரு ஹோமியோ மருத்துவர் மனிதனையும், சமூகத்ததையும் மிக ஆழமாகப் படிக்க வேண்டும்.  சிறந்த சமூக அறிவு இல்லாமல் ஒரு நல்ல ஹோமியோ மருத்துவராக இருக்க முடியாது என்பதை இவர் நூல்கள் சிறப்பாகக் கூறுகின்றன.
.
இவர் இவ்வாறு மருந்துகளைப் பார்ப்பதற்கு ஆதாரங்களை எவ்வாறு திரட்டினார் என்பதற்கு போதிய விளக்கங்கள் இல்லை.  பல சமயம் புதிராக இருக்கிறது.  இருந்தாலும், அவர் கூறியபடி மருந்துகள் பயன்படுத்தப்டும்போது அவைகள் மிகவும் சிறப்பாக குணமளிக்கின்றன.
ஒரு மனிதனுக்கு நோய் தோன்றிய காலத்தில் அவனுக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் உள்ள முரண்பாடு என்ன என்பதை அறிந்து, அந்த முரண்பாட்டின் விளைவாகத் தோன்றிய நிலைப்பாட்டுக்கு (state) தகுந்த மருந்தைத் தேர்வு செய்தால், அந்த மருந்து அவனுக்கு உரிய மருந்தாகிறது.  அவனை நலப்படுத்துகிறது.
.
ஜான் ஸ்கால்ட்டனைப் பின்பற்றும்போது குறிகளுக்குக் (symptoms) கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து விடுகிறது.
மருந்துகாண் ஏட்டைப் பயன்படுத்தத் தேவையில்லை.  
ஒட்டு மொத்தக் குறிகளைக் காண வேண்டிய அவசியமில்லை.
மியாசம் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை.  துயரரை அறிவது எளிமையாக்கப்படுகிறது.
.
     ஆக,  ஜான் ஸ்கால்ட்டன் ஹோமியோபதித் துறையின் புதிய சகாப்தம்.  அவருடைய ஆய்வு முறையை மேலும் செழுமைப்படுத்தும்போது ஹோமியோபதி மேலும் சிறப்படையும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.


இவரை கண்டுபிடியுங்கள் 1 பழ.வெள்ளைச்சாமி



 சில மாதங்களுக்கு முன்பு ஒர் இளைஞன் என்னிடம் வந்தார்.  அவருக்கு ஆஸ்துமா நோய்.  அவருக்கு இந்த நோய் 6 வருடங்களாக இருப்பதாகக் கூறினார்.

அவருடைய நோயையும், அகநிலை முதன்மைக் குறிகளையும், புறநிலை முதன்மைக் குறிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அவருக்கு ஒரு மருந்து தேர்வு செய்து கொடுத்தேன்.  ஆனால்அவருக்குச் சரியான மாற்றம் ஏற்படவில்லை என்று இரண்டு வாரத்தில் திரும்பி வந்தார்.

நான் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்த துயரர் ‘சரியில்லை’ என்று கூறியவுடன் எனக்குக் கொஞ்சம் மனச் சோர்வு உண்டாகியது.

நான் மறுபடியும் அவருடைய கேஸை ஆய்வு செய்தேன்.

""""தம்பி நீங்க இப்ப என்ன செய்றீங்க ?""
""""நான் BE. கம்ப்யூட்டர் படிக்கிறேன்"".
இதை நீங்கள் விரும்பிப் படிக்கிறீர்களா?  அல்லது வீட்டில் படிக்கச் சொன்னாங்களா?
""""இது விருப்பம் உண்டு, விருப்பம் இல்லைங்கிறதைப் பற்றியதாக இல்லை.  ஏதே கம்ப்யூட்டர் படிச்சா வேலை கிடைக்கும் என்றுதான் படிக்கிறேன்""
சரி படித்துவிட்டு என்ன செய்யலாம்னு உத்தேசம்?
அமெரிக்கா போகனும்.
ஏன் இங்கே நல்ல வேலை கிடைக்காதா?
கிடைக்கும்.  ஆனால் சம்பள என்ன சார் தரப் போறாங்க?கூடப் போனா ரூ.10,000/- தருவாங்க.  இதை வைத்து என்ன செய்வது?
என்ன தம்பி! ஆரம்பத்திலே இது நல்ல சம்பளம்தானே?
இதை வைச்சு என்ன சார் பண்ணுவது?  இதுவே அமெரிக்காவா இருந்தா ரூ. 1 1/2 இலட்சம் சம்பளம் கிடைக்கும்.
என்னதான் அமெரிக்காவில் சம்பளம் அதிகம் கொடுத்தாலும், நம்ம நாட்ல இருக்கிறாப்போல இருக்குமா தம்பி?
நாடு இருக்கட்டும் சார், பணம் வேணும் சார்.
என்ன தம்பி பணத்திற்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறீங்க?
பணம் இல்லாவிட்டால் எவன் சார் மதிக்கிறான்?   நல்லா பணம் சம்பாதிச்சு நல்ல பங்களா, கார் எல்லாம் வாங்கனும் சார்.  அப்பத்தான் நமக்குன்னு ஒரு அந்தஸ்து கிடைக்கும்.  எல்லாத்துக்கும் பணம் தான் சார் வேணும்.

இப்போது இவருடைய பேச்சிலிருந்து இவரைப் புரிந்து கொண்டேன்.
இவருக்கு வேண்டியது அந்தஸ்து, பங்களா, கார், ஆடம்பர வாழ்க்கை எல்லாவற்றிற்கும் பணம்.

மேலும் இவரை அணுகிப் பார்த்ததில் இன்னும் பல விவரங்கள் கிடைத்தன.  இப்போது அவரை யார் என்று நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
இவரை யார் என்று புரிந்து கொண்டு அந்த மருந்தைக் கொடுத்த பின்பு அவருக்கு ஆஸ்துமா உடனடியாக நின்று விட்டது.   அதற்குப் பிறகு ஆறு மாதம் 
ஆகயும் இன்னும் ஆஸ்துமா வரவே இல்லை.

மற்றவர்கள் தம்மை """"வசீகரமற்றவர்கள்"" என்று நினைத்து விடுவார்கள் என்ற பயம் இவருக்கு இருந்தது.  இவருடைய சமூக அந்தஸ்து குறித்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பயப்படுவார்.  இந்த உலகத்திற்குப் பிரகாசமாகத் தெரிவது போன்ற ஆடம்பரமான வேலையில் அமர விரும்புகிறார்.  தம்மை மற்றவர்கள் மட்டமாக நினைத்து விடுவார்கள் என்ற பயம்.  """"என்னுடைய அந்தஸ்து குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்?  போதிய பணம் உள்ளதா? நான் பார்ப்பதற்கு வசீகரமாக உள்ளேனா?"" போன்ற கேள்விகள் இவருக்கு எழுந்துகொண்டே இருந்தன.

இவருக்கு தாம் ஏழையாகி விடுவோம் என்ற பயம்.  பணத்தில், அந்தஸ்த்தில், அழகில், வசீகரத்தில் குறைந்து விடுவோமோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.  இவருக்கு எதிலும் முடிவு எடுக்க முடியாமல் இருப்பதிலிருந்து இவர் பாதுகாப்பற்ற தன்மையால் பயப்படுகிறார் என்று விளங்கியது.

மற்றவர்கள் குறை சொன்னால் இவர் மிகவும் பாதிக்கப்படுவார்.  இவரை மற்றவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற பயம்.  வாழ்க்கையில் எந்தெந்த வகையில் வசீகரமாக இருக்க முடியுமோ அந்த வழி முறைகளையெல்லாம் பின்பற்றிப் பார்ப்பார்.    அவருடைய எண்ணம், பகட்டான பதவி, அந்தஸ்து பற்றியே அதிகமாக இருக்கும்.  நாம் கவர்ச்சிகரமான வேலையில் இருக்க வேண்டும் என நினைத்தார்.  பார்ப்பதற்கு நேர்த்தியாகவும், கவர்ச்சியாகவும் தாம் தோன்ற வேண்டும் என்று விரும்புவார்.  இந்த சமூகத்தில் எடுப்பாக, பார்வைக்கு அழகாக, ஒருவரை கவரக்கூடிய அளவுக்கு வசீகரமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்.  அவருடைய நினைப்பு எல்லாம் பணத்தைப் பற்றித்தான்.  அதிகமாக பணம் இருந்தால் சமூகத்தில் மதிக்கப்படுவோம் என்ற எண்ணம்.  கார் வாங்க வேண்டும், பிரகாசமான ஆடை, வீடு முதலியவை வேண்டும்.  அப்போதுதான் மற்றவர்களைக் கவர முடியும் என்று நினைப்பவர்.

நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல அழகுள்ளவர்களைப் பார்க்கும்போதெல்லாம் தாம் மட்டமாக இருப்பதாக நினைப்பார்.

இப்படிப்பட்டவரிடம் உள்ள பயமும், பாதுகாப்பின்மையும் பல விளைவுகளுக்குக் காரணமாக இருக்கின்றன.  முதலில் அவர் மற்றவர்களிடம் பழகுவதைக் குறைத்துக் கொள்வார்.  மற்றவர்கள் இவரைப் பற்றிக் கவலைப்படாதது  போல பாசாங்கு செய்வார்.  எல்லாத் தொடர்புகளையும் தவிர்த்து விடுவார்.

இவருக்கு தாம் பிரகாசமாகவும், மினுமினுப்பாகவும் இருக்க உதவுகின்ற பொருளை இழந்து விடுவோம் என்ற பயம் இருக்கும்.  குறிப்பாக பணத்தை இழந்து விடுவோம் என்ற பயம் இருக்கும்.  ஏனெனில், அது தான் இவருக்கு நலமான ஆடை, அணிகலன்கள், பளபளப்பான கார் முதலியவை வாங்க உதவும்.

இவருக்கு பளபளப்பான தோற்றம் போய் விடுமோ என்ற பயம் இருக்கும்.  இவருடைய தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்.  எடுப்பான தோற்றம் இருந்தால்தான் பொது மக்கள் மத்தியில் பகட்டாக திரிய முடியும் என்று எண்ணுவார்.

அவர் தம் பாதுகாப்பும், ஆதரவும் ஸ்திரமற்றதாகவும், நம்ப இயலாததாகவும் இருப்பதாக உணர்வார்.  அதனால் முழுமையான பாதுகாப்பைக் கடுமையாகவும், உறுதியாகவும் இருப்பதன் மூலம் பெற முடியும் என்று எண்ணுவார்.

மேலும் ஏதோ இழப்பு ஏற்படப் போவதாக உணர்வார்.  தொழில் நொடித்து விடப் போதாகவும், அதனால் எல்லாப் பணத்தையும் இழந்து விட நேரிடும் என்று பயப்படுவார்.  பணம் ஒன்றுதான் இவருக்கு பாதுகாப்பு அளிக்கும் என்றும், எவ்வளவுக்கெவ்வளவு பணம் சேமிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு எல்லா பயத்தையும் போக்க முடியும் என்றும் உணர்வார்.

இவருடைய பாதுகாப்பற்ற தன்மையை இவரின் உறவு முறைகளிலும் காண்பார்.  இவர் உறவுகள் ஸ்திரமற்றதாகவும், இவர் சார்ந்துள்ள உறவு முறை முறிந்துகூட போகும் என்றும் எண்ணுவார்.  இதனாலேயே சுதந்திரமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்வார்.  இவர் முற்றிலும் சுதந்திரமானவராகவும், பலமானவராகவும் இருப்பார்.  இவருக்குப் பல நண்பர்களோடும், மக்களோடும் தொடர்பு இருந்தாலும், இவர் தன்னைச் சார்ந்து இருப்பதையே விரும்புவார்.  

இவர் கடும் உழைப்பாளியாகவும், அவருடைய பொருளாதார அபிவிருத்திக்கு பலமான அடித்தளம் அமைப்பவராகவும் இருப்பார்.  இவரிடம் எப்போதும் தம்முடைய பாதுகாப்பு மற்றும் கட்டுமானங்கள் சிதைந்து விடும் என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.  இந்தப் பேரழிவு இவரை போண்டியாக்கிவிடும் என்று எண்ணுவார்.

இவர் நல்ல ஒழுங்கமைவான செயல்திறம் மிக்கவர்.  இவருடைய குறிப்புகள் முறையாக எழுதப்பட்டிருக்கும்.  ஒரு விஷயத்தைக் கருத்துக்களின் அடிப்படையில் வகைப்படுத்தி முழுமையாக வரிசைப்படுத்தி சொல்லக் கூடியவர்.  எழுதுகின்ற விஷயத்தை ஒரு தாளின் குறைவான பகுதியில் எழுதி விட்டு எஞ்சிய தாளைக் கிழித்து விடுவார்.

அவர் அவருடைய சொத்துக்களையும், உடைமைகளையும் நன்கு பத்திரமாக வைத்துக் கொள்வார்.  அவர் உடல் நலத்தையும், தொழிலையும் சீராகப் பராமரிப்பார்.  உறுப்பு படிப்படியாக செயல் இழக்கும் தன்மையான நோய்கள் உருவாகும்.  (உதாரணம் கண்புறை நோய், எலும்பு மூட்டு வேக்காடு நோய்) தம் உறுப்பு முழுமையாகப் பழுதடைந்து விட்டால் என்ன செய்வது என்பது பற்றி சதா சிந்தித்துக் கொண்டே இருப்பார்.  முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்வார்.  அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லாத போதும் பாதுகாப்பு நடவடிக்கையாக சிகிச்சையைத் தொடர்வார்.  அவர் சொல்வார் """"அது சரி, இழந்த பகுதி போகட்டும், இனிமேல் இருப்பதையாவது இழந்து விடாமல் இருப்பதற்கு சிகிச்சை அளியுங்கள்"" என்பார்.

இவருக்கு தம் உறவினர்கள் இறந்து போவது போன்ற கனவுகள் தோன்றும்.  ஏனெனில் இவர் பொருளாதார ரீதியாக யாரைச் சார்ந்து இருக்கிறாரோ அவர் இவரைக் கைவிட்டு விடுவார் என்ற பயம் இருக்கும்.  அன்பும், பராமரிப்பும் செலுத்தும் நபர்கள் கைவிட்டு விடுவார்கள் என்ற பயம் இருக்கும்.
இவர்பொருளாதார ரீதியாகவும், உறவு முறையிலும், பாதுகாப்பாக இருப்பதற்கான முயற்சியில் தோல்வி அடையும்போது, இவர் முழுமையாக, உறுதி குலைந்து முடிவெடுக்க முடியாத, எளிதில் பாதிப்படையும் தன்மையுடன் உதவியற்றவராவார்.  மனதில் சோர்வு ஏற்பட்டு ஊக்கம் குறைந்து எல்லாவற்றையும் இழந்த நிலைக்கு வந்து விடுவார்.


இப்போது இவர் யாரென்று தெரிகிறதா? 
..
..
....

......?????????

இவர் தான் கல்கேரியா ஃப்ளோர்

கல்கேரியா ஃப்ளோரின் கரு:

Calcarea

 What do others think
 Sensitive to criticism
 Insecurity
 Shyness
 Fears
 Protection
 Withdrawal
+

 Fluor

 Glamour and glitter
 Money, cars, clothes
 Sex
 Hard, hurried, fluent
 Psychopathic
 Superficial contacts

calc flour
@jan scholten
HOMOEOPATHY AND MINERALS
# ஹோமியோபதி