Sunday 12 March 2017

அம்மோனியா என்ற அருமருந்து

[ஹோமியோபதி அற்புதங்கள்
மேஜர் தி.சா.இராஜூ]
'
பல ஆண்டுகளுக்குப் பின் நான் மீண்டும் அனிருத்தனைச் சந்தித்தேன். பங்களாதேஷ் விடுதலைப் போரில் அவன் என் படைப்பகுதியில் பணிபுரிந்தான். பாகிஸ்தானியக்குண்டு ஒன்று வெடித்து அதன் விளைவாக அவன் ஒரு காலை இழந்தான். செயற்கைக் காலுடன் அவன் தொடர்ந்து பணியாற்றினான். ஊனமடைந்த நிலையிலும் அந்தப் போரில் பங்கு பெற்றவர்கள் பணிபுரியலாம் என்று அப்போதைய பாரதப் பிரதமர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அனிருத்தன் ஊனமுற்ற நிலையில் வீடு திரும்பவில்லை. அவன் போரில் மரணமடைந்து விட்டதாகக் குடும்பத்திற்குச் செய்தி அனுப்பச் செய்தான்.

அதற்குக் காரணமிருந்தது. அவனுக்கும் ஓமனக்குட்டிக்கும் திருமணம் நடக்க இருந்தது. ஊனமுற்ற நிலையில் அவள் அவளை மணக்க விரும்பவில்லை. ஓமனக்குட்டியோ திலகவதியைப் போல் அருஞ்செயல் புரிந்தாள். வாழ்க்கையைத் துறந்து கன்னிமாடத்தில் சேர்ந்து சமயத்தொண்டாற்றினாள். இந்த விவரங்கள் எல்லாம் அனிருத்தனே என்னிடம் கூறி தன் மனச்சுமையைக் குறைத்துக் கொண்டான்.

கோப்புகளில் என் கையொப்பம் பெறுவதற்காக சிலர் வரிசையில் நின்றனர். அவர்களில் அனிருத்தனும் இருந்தான். காத்திருந்த பத்து நிமிடங்களில் அவன் பலமுறை கழிப்பிடத்திற்குச் சென்று திரும்பினான். தும்மலும், இருமலும் ஒரே மூக்கடைப்பு அருகில் வந்ததபோது அவருடைய கைக்குட்டையில் பல கருப்புத் திட்டுகள் இருந்ததைக் கண்டேன்.
'
‘வழி நேரம் ஸாரினைக் காணான் ஒக்குமோ?’ (மாலையில் தங்களைச் சந்திக்கலாமா?) இது அவனுடைய கேள்வி.
'
‘ஆறு மணிக்கு வா. இந்த நேரத்தில்தான் நான் அன்பர்களை சந்திக்கிறேன்’ நான் பதிலளித்தேன். அற்பசங்கையை முடித்துக்கொண்டு அவன் தன்னறைக்குத் திரும்பினான். \
மாலை அனிருத்தன் என்னைச் சந்தித்து தன் உபாதைகளை விவரித்தான்.
அவற்றைப் பதிவு செய்து கொண்டேன்.
இரண்டு சிறப்புக் குறிகள் தலை தூக்கி நின்றன.
1. காலையிலேயே மூக்கடைப்பு
2. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம்.
'
அனிருத்தனுக்கு நான் கொடுத்த மருந்து அம்மோனியம் ம்யூரியாடிகம். ஆறாவது வீரியம் மூன்று பொட்டலங்கள்.
ஒரு வாரம் பொறுத்து அவனைக் கால்பந்து மைதானத்தில் சந்தித்தேன். ஒரு காலத்தில் அவன் சிறந்த கால்பந்தாட்டக்காரனாக இருந்தான். இப்போதம் அவனைப் பழைய ஆசை விடவில்லை. அடிக்கடி விளையாட்டு மைதானத்திற்குச் சென்று நண்பர்களுக்கு ஆலோசனை வழங்கினான். அவர்களை ஊக்குவித்தான். விளையாட்டுத் திடலில் அவனைக் காணும்போதெல்லாம் என் நெஞ்சு துணுக்குறும்.
எது கிட்டாதோ அதைத் தேடி அலைகிறேன். எதை நான் விரும்பவில்லையோ அது எனக்கு வசப்படுகிறது என்று குருதேவர் தாகூரே கூறி வருந்துகிறார். அனிருத்தனின் வாழ்க்கையில் அந்தச் செய்தி உண்மையானது கண்டு நான் உளம் வெதும்பி நின்றேன்.
'
"இந்நிலை நான் ஸாரினைக் காணான் வன்னு அத்யேகம் புறத்துப்போயி"
‘நேற்று தங்களைக் காண வந்தேன் நீங்கள் வெளியே போயிருந்தீர்கள்?’ அனிருத்தன் கூறினான்.
அகம், புறம் தூய தமிழ்ச் சொற்கசள் மலையாளத்தில் உள்ளதைக் கண்டு நான் பூரித்துப் போவேன்.
'
தூய தமிழ் சொற்கள் மற்ற திராவிட மொழிகளில் இருப்பiதை அறிவது இனிய அனுபவம். அவை வடமொழியிலும் உள்ளன.
அனிருத்தன் த்ன் உடல்நிலைப் பற்றிக் கூறினான். சளித் தொந்தரவு, மூக்கடைப்பு அனைத்தும் முற்றிலுமாக நீங்கி விட்டன. இன்னொரு விவரம் தங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். என் கால் வெட்டப்பட்ட இடத்தில் எப்போதும் ஒரு வேதனை இருந்த வண்ணம் இருந்தது. எவ்வளவோ வலிக் குறைப்பு மருந்துகள், ஊசிகள். ஆனால் வேதனை குறையவே இல்லை. ஆனால் கடந்த மூன்று நாட்களாக எந்தத் தொந்தரவும் தற்போது இல்லை. அவன் மகிழ்ச்சியுடன் கூறினான்.
'
எனக்கும் இது புதிய தகவல். நான்மருத்துவ மேதை கெண்டின் நூலைப் புரட்டினேன். அவர் இந்த வகையில் ஏதும் குறிப்பிடவில்லை. என் ஆசான் தந்துள்ள விவரங்களைப் புரட்டிப் பார்த்தேன். துண்டிக்கப்பட்டட நரம்புப் பகுதியில் ஏற்படும் வேதனையை இந்த மருந்து போக்கிவிடும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
என் ஆசான் ஒரு மாகடல். லிப்பே, ஃபாரிங்டன், ஃபௌபிஸ்டர் ஆகிய நூலாசிரியர் தெரிவித்துள்ள விவரங்கள் எல்லாம் அவர் விரல் நுனியில் இருக்கும். அம்மோனியம் ம்யூரியாடிக்கம் குறித்த இந்தத் தகவலை அவர் என்னிடம் தெரி.த்திருந்தார். இதை போயரிக்கும் குறிப்பிட்டிருப்பதை நான் பின்னாளில அறிந்து கொண்டேன். இந்த விவரத்தை மறக்காமல் நான் என்னுடைய இரண்டாவது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
.
.........ஆண்டுகள் பல உருண்டு விட்டன. கடந்த மாதம் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த அன்பர் அதைச் சென்னையிலிருந்து எழுதியிருந்தார். பெயர் ஜகன்னாதன். ஒரு விபத்தில் சிக்கி அவர் தமது கையை இழந்து விட்டார். காயம் குணமடைந்து விட்டது. ஆனால் வேதனை எப்போதும் தொடர்ந்து இருந்தது.
அவர் எழுதுகிறார். ‘இந்தத் துயரத்தைத் தணிக்க ஹோமியோபதி உட்பட பல மருத்துவ முறைகளை மேற்கொண்டேன். நிவாரணம் கிடைக்கவில்லை. நண்பர் ஒருவர் பரிவுரை செய்ததன் பேரில் உங்கள் புத்தகத்தைப் புரட்டினேன். ‘விபத்து’ என்ற தலைப்பில் நவச்சாரம் குறித்து எழுதியிருந்தீர்கள். ஆறாவது வீரியத்தில் அதைப் பயன்படுத்தினேன். எனக்குக் குணம் கிடைத்தது என்று எழுதியிருந்ததோடு தனது புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார்.

நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போனேன். தொலைதூரத்தில் சுலபமாக உட்ட முடியாத இடங்களில் மருத்துவத் தொண்டு புரியும் அன்பர்களுக்காக நான்இந்த மருத்துவ இலக்கியத்துறையில் ஈடுபட்டிருக்கிறேன். அது பலன் தருவதைக் கண்டு இறைவனின் அருளை எண்ணி வியக்கிறேன். ‘ஹோமியோபதி ஒரு வாழ்கலை, விஞ்ஞானம் என்ற அனது நூலில் (பக்கம் 360-61) எழுதியுள்ள விவரத்தை இங்கு குறிக்க விரும்புகிறேன்.


நவச்சாரம்

இதினின்று தயாரிக்கப்படுவது அம்மோனியம் ம்யூரியாடிக்கம்.  விரல் நுனிகளில் எல்லாம் புண்பட்டதைப் போன்ற நோவு.  குதிகாலில் இரண வலி.  தசை நார்கள் குறுகிப் போவதால் ஏற்படும் சியாட்டிகா என்ற நரம்பு வலி.  இவற்றிற்கு இந்த மருந்து மிகச் சிறந்த பயனை அளிக்கும்.  வெட்டி எடுக்கப்பட்ட பகுதி மிகுதியில் நரம்பு தொடர்பான வலி ஏற்பட்டாலும், இம்மருந்து செயற்கை உறுப்புகளுடன் நடமாடும் பல படை வீரர்களின் சிரமங்களை இது போக்கிற்று என்பது நான் அறிந்த உண்மை.
இறைவன் பரம கருணை உடையவன்.
அம்மோனியம் உப்பு இனத்தைச் சேர்ந்தது.  காரப் பொருள் (ஆல்கஹால்) நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் உப்பு (சோடியம் குளோரைடு) இரு வகைகளில் கிடைக்கிறது.  ஒன்று கடலுப்பு மற்றது கல்லுப்பு.  தென்னாட்டில் கல்லுப்பை இந்துப்பு என்று அழைப்பார்கள்.  இது மருந்துக் கடைகளில் மட்டும் கிடைக்கும்.  தென்னாடு கடலினால் சூழப்பட்டுள்ளது.  அந்த நீரைக் கரைக்குப் பாய்ச்சி சூரிய வெப்பத்தினால் உலர வைத்து கடலுப்பு தயாராகிறது.  இந்த இடத்தை உப்பளம் என்று அழைப்பார்கள்.  வடஇந்தியாவில் மளிகைக் கடைகளில் கல்லுப்பே கிடைக்கும்.  பெரும் துண்டுகளாக இருக்கும்அவற்றை உடைத்து உபயோகிப்பார்கள்.  பஞ்சாபில் இதற்குப் பெயர் ‘லூன்’ என்பதாகும்.  வங்கத்தில் ‘லொபன்’.  இரண்டுமே லவணம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு.  இமயமலை முழுவதும் ஒரு காலத்தில் கடலடியில் மூழ்கிக் கிடந்தது.  அதன் காரணமாகவே மலைப்பிளவுகளில் உப்புப் பாளங்கள் கிடைக்கும் நிலை ஏற்பட்டது.
உலகத்தின் தொன்மையான நாகரிகம் உள்ள நாடுகளில் எகிப்தும் ஒன்று.  யூத, கிறிஸ்துவ சமயங்கள் தோன்றும் முன்னரே அங்கு ஒரு பழமையான சமுதாயம் வாழ்ந்து வந்தது.  அர்கள் கட்டடக் கலையில் கைதேர்ந்தவர்கள்.  அங்குள்ள பெரிய கற்சிலைகளும் பிரமிடுகளும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.  முக்கோண வடிவில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் தம்முள், பாதுகாக்கப்படும் பொருட்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்கும் என்று அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.  இந்த உண்மை அந்தப் பழங்கால எகிப்திய மக்களுக்குத் தெரிந்திருந்தது.  அவர்கள் கல்லினால அமைத்திருக்கும் பிரமிடுகளில் பாதுகாக்கப்படும் மனித உடல்கள் கூடப் பல ஆண்டுகள் கெடாமல் இருந்திருக்கின்றன.  ‘ஆமூன்’ என்ற எகிப்திய தேவதையின் பெயரிலிருந்து பிறந்ததே அம்மோனியா என்று மொழி வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  ஒட்டகங்களின் சாணக் குவியல்கள் இறுகிப் போய் அம்மோனியப் பாறைகள் ஆயின என்று ஸ்டெட்மான்ஸ் மருத்துவ அகராதி (பக். 84) குறிப்பிடுகிறது. 
எகிப்து ஒரு பாலைவனப் பிரதேசம்.  அங்கு ஒட்டகங்களின் மந்தை மிகுதி.  ஆகவே இது உண்மையாக இருக்கக்கூடும்.  இந்த அம்மோனியா காரத் தன்மை வாய்ந்தது.  சிறந்த களிம்பு நீக்கி, இன்றும் செம்பு, பித்தளை  ஆகிய  உலோகங்களை இணைப்பதற்கு இந்தக் காரப் பொடியைப் பயன்படுத்துகிறார்கள்.  கடுமையான சளித் தொந்தரவுக்கு ஆளாகியிருப்பவர்கள்இதை மோர்ந்து பார்கும் உப்பாகப் பயன்படுத்துவார்கள்.  இது மூக்கடைப்பை நீக்கிவிடும்.  மூக்கின் வழியாகக் காற்றுப் பாதைக்குள் இறுகியிருக்கும் அடைப்புகளை இது விரைவில் இளக்கிவிடும்.  சிலர் உறிஞ்சிகளைப் [inhalers]  பயன்படுத்துவார்கள்.  இதனுள் அடைக்கப்பட்டிருப்பதும் அம்மோனியாவே.
தூய்மையான அம்மோனியா கிடைப்பது அரியதாகும்.  இது மற்ற உப்புகளுடன் கலந்தே கிடைக்கும்.  கார்பனேட், குளோரைடு, பாஸ்பரஸ் ஆகியவற்றுடன் இது சேர்க்கப்படும்.  ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மருத்துவ இயல்பு உண்டு.  பொதுவாகப் பூந்தசைப் பகுதிகளில் அடைந்திருக்கும் சளியை நீக்குவதில் இது நிகரற்ற ஆற்றல் உடையது.
இந்த மருந்து மேதை ஹானிமன் காலத்து.  அவருடைய நாட்பட்ட நோய்கள் என்ற நூலில் இது குறித்து குறிப்புகள் உள.  இதை மெய்ப்பிக்கும்போது அவர் எத்தனை துயரங்களை மேற்கொண்டிருப்பார் என்று எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.  உடல் உபாதைகள் மட்டுமின்றி, உளவியல் துறையிலும் இது சிறப்பாகப் பணிபுரிகிறது என்று மேதை கெண்ட் எழுதுகிறார். (பக். 99) அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆட்படும் மங்கையர், சிறப்பாக மாதவிலக்குக் காலத்தில் சிரமப்படும் தன்மையுடையவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்து என்று அவர் கருதுகிறார்.
இதை என் அனுபவமும் உறுதிப்படுத்துகிறது.  நடுவயதைத் தாண்டிய ஒரு தாயார் எப்போதுமே புலம்பிக் கொண்டேயிருப்பார்.  பிறர் தன்னைப் பற்றிப் பேசுவதைக் கேட்டாலே பொங்கி எழுவார்.  எவ்வளவோ நய உரைகளைக் கூறினாலும் ஏற்க மறுப்பார்.  இத்தகைய இயல்புள்ளவர்களுக்கு அம்மோனியம் கார்பனேட் சிறந்த மருந்தாக அமைவதை நான் கண்டிருகிறேன்.  மாதவிடாய் ஏற்படும் முன்பும், அந்த நிலையில் இருக்கும் பெண்களும் பல உள.  உடலியல் மாற்றங்கள் நிகழும்.  இது இயற்கை நியதி.  அதுகாரணம் பற்ய அவர்கள் அமைதியாக ஒதுங்கி இருக்க வேண்டும் என்று வகுத்தார்கள்.  அவர்களுக்கு குளியல் கூடாது என்தற்குக் காரணம் குளிர்ந்த நீர் போக்கைத் தடை செய்யும் என்பதே.
பல குடும்பங்களில் மாதர்கள் பணிபுரிந்தே ஆக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.  இது தவிர்க்க முடியாததென்றாலும், அவர்கள் அந்த நாட்களில் கடினமான உடலுழைப்பில் ஈடுபடாமல் இருத்தல் நலம்.
அம்மோனியா மிகுந்த காரத்தன்மை உள்ளது என்பதை முன்னரே பார்த்தோம்.  பூந்தசைப் பகுதியிலிருந்து வெளிப்படு எந்த ஒழுக்கும் மூக்கு, கண், வாய், பெண்ணுறுப்பு, சிறுநீர்ப்பாதை ஆகிய எவற்றிலிருந்தும் வெளிப்படும் புண்ணை உண்டாக்கும் அளவிற்கு எரிச்சலுடன் கூடியதாக இருந்தால் நமக்கு உடனடியாக நினைவுக்கு வர வேண்டியது அம்மோனியா.  கண்களிலிருந்து வெளிப்படும் ஒழுக்கின் காரத்தன்மைனால் இமை முடிகள் உதிர்ந்து போகும்.  இதையும் கெண்ட் குறிப்பிடுகிறார்.
இன்னொரு சிறப்புக்குறி வெளிப்பாட்டின் நிறம்.  அது கருநிறமாக இருக்கும்.  மூக்கிலிருந்து வெளிப்பம் சளி கூட அதே நிறத்தில் இருகும்.  விலக்கின்போ வெளிப்படமூ உதிரமும் அதே நிறமாகவே இருக்கும்.  சிறுநீரும், மலமும் கூட அதே நிறத்தில் அமையு  ஏனைய பல மருந்துகளுக்கும் இத்தகைய தன்மை உண்டு என்றாலும், வெளிப்பாடு காரத்தன்மையுள்ளதாக இருந்தால் அப்போது உறுதியான பயன்தருவது அம்மோனியா.
இதயத்துடிப்பு மிகுதல், படபடப்பு, கிறுகிறுப்பு ஆகிய இடர்களுக்கும் இது சிறந்த நிவாரணி.  பழங்காலத்திலிருந்தே மருத்துவர்கள் இதைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.  சித்த, ஆயுர்வேத முறைகளிலும்இதன் பெருமை பேசப்படுகிறது.
உடலும், முகமும் வீங்கி வெப்பம் அதிகரித்து உடலின் மேற்பகுதியில் புள்ளிகள் ஏற்பட்டு மயக்க நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இது உடனடி நிவாரணம் அளிக்கவல்லது.  இதை  எல்லா முறை மருத்துவர்களுமே ஏற்றுக் கொள்கின்றனர்.