Friday 17 February 2017

இவரை கண்டுபிடியுங்கள் 4 பழ.வெள்ளைச்சாமி



சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்மணி என்னுடைய மருத்துவமனைக்கு வந்தார்.  அவருக்கு வயது 26.  அவருக்கு சைனஸ் என்றும் பல வருடங்களாக இந்த நோய் இருப்பதாகவும் சொன்னார்.

""""சார்,  இந்த நோயினால் என் மகிழ்ச்சியே போய்விட்டது.  நீங்கள் தான் குணப்படுத்த          வேண்டும் "".

""""எவ்வளவு காலமாக இருக்கிறது?  என்ன வைத்தியம் பார்த்தீர்கள்? "".

ஏழு, எட்டு வருடங்களாக இருக்கிறது.  எல்லா மருத்துவமும் பார்த்துவிட்டோம்.   ஏன் ஹோமியோ மருத்துவம் கூட பார்த்து விட்டோம்.  அல்லோபதியில் ENT எல்லாம் பார்த்தோம்.  அவர் மூக்கு தண்டு வளைந்து விட்டதாகவும், அறுவை சிகிச்சை செய்தால் சரியாகி விடும் என்றும் கூறினார்.

""""தற்போது உங்களுக்கு என்ன செய்கிறது? "" .
காலையில் எழுந்ததும் தும்மல், மூக்கில் நீர் ஒழுகுதல், மூக்கடைப்பு, தலை பாரமாகிவிடுகிறது.  என்னால் காலையில் ஒரு வேலையும் செய்ய முடியவில்லை.  என்னுடைய மகிழ்ச்சியே போய்விட்டது.

""""இது எப்போது வந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? "" .
இது நான் +2 படிக்கும்போது வந்திருக்கலாம்.

""""+2 படிக்கும்போது என்ன நடந்தது? ""

""""+2 படிக்கும்போது எப்பப்பார்த்தாலும் படி, படி நல்ல மார்க் வாங்கணும்னு எங்க அப்பா என்னை டிவி கூட பார்க்க விடமாட்டார்.  யாரோடும் பேச விடமாட்டார்.  தூக்கம் கூட சரியாக இல்லை.  எந்த பொழுதுபோக்கும் இல்லாமல் எப்போது பார்த்தாலும் படிப்பு.  எனக்கும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை "".

""""நல்லா படித்தால்தானே நல்ல மார்க் வாங்கி நல்ல கோர்ஸ் போகலாம்? "" .

 """"நல்லா படித்தேன் போங்க! அதுக்கு இப்படியா ஒரு Recreation,  ஓய்வு கூட இல்லாமல்? "" எனக்கு எப்பத்தான் +2 படிப்பு முடியுமோ என்று இருந்தேன்.  சார், எனக்கு அந்த டென்சனில்தான் சைனஸ் வந்திருக்கும் சார்.

"""" இப்ப என்ன செய்கிறீர்கள்? ""
இப்ப டீச்சர் வேலை பார்க்கிறேன்.

எவ்வளவு நாளா?
கடந்த ஒரு வருடமாக.

வேலை பிடித்திருக்கா?
சுத்தமா பிடிக்கவில்லை சார்.

நல்ல வேலைதானே.  நல்ல சம்பளம் தர்ராங்களே.

வேலை நல்ல வேலைதான்.  அதுக்கு காலையில் 5 மணிக்கு எழுந்து, சமைச்சு வீட்டுக்காரருக்கு சாப்பாடு கட்டி பிள்ளைக்குச் செய்ய வேண்டியதைச் செஞ்சு, 8 மணிக்குப் புறப்பட்டு டவுன் பஸ்ஸில் ஏறி 1 மணி நேரம் பயணம் செய்து வேலை பார்க்கிற ஊருக்குப் போயி, அங்கே சாயந்தரம் வரை பிள்ளைகளோடு கத்திவிட்டு, சாயங்காலம் வீடு வந்து சேர மணி 8 ஆகி விடுது சார்,  இது என்ன சார் வேலை, வேலை பார்த்தமா, வந்தமா, ஜாலியா இருந்தமா என்று இல்லாமல்,  ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேல் வேலை வேலை என்று வேலையே பார்த்துக்கிட்டு இருந்தால், அது என்ன சார் வாழ்க்கை.  எனக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.

"""" வேலை பிடிக்கவில்லையா? ""
வேலை பிடிக்குது.  அதுக்காக எந்த மகிழ்ச்சியும் இல்லாமல் வேலைக்கும் போவதுதான் வாழ்க்கை என்று ஆகிவிடக்கூடாது சார்.  என் கணவரும் அப்படித்தான்.  அவர் பஞ்சாயத்து யூனியனில் கிளார்க் வேலை பார்க்கிறார்.  அவருக்கு என்னைவிட ஆபீஸ்தான் முக்கியம்.  காலையில் போறவர் இரவு 10.00 மணிக்குத்தான் வருவார்.  வந்தும் ஆபீஸ் நினைப்புதான்.  எதுக்கு சார் கல்யாணம் பண்ணனும்.  நான் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறார் சார்.  எல்லோரும்போல 10 மணிக்கு ஆபீஸ் போனோம், வேலை பார்த்தோம், 6 மணிக்கு வீட்டுக்கு வந்தோம், வீட்டில் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருந்தோம்னு இருக்க வேண்டாமா சார்? என்று அந்தப் பெண்மணி மனக் குமுறலை கொட்டிவிட்டார்கள்.

"""" வீட்டில் நீங்க எத்தனை பேர்? ""
நான், என் கணவர், குழந்தை, என் மாமனார், மாமியார், சின்ன வீடு சார்.  ஒரு பிரைவசி இல்லை.  அதனால் வேறு வீட்டுக்குப் போகலாம்னு இவருகிட்ட சொல்றேன்.  இவரு புரிஞ்சிக்க மாட்டேங்கிறார்.

அந்தப் பெண்மணி சொன்ன விசயத்திலிருந்து அவரைப் புரிந்து கொண்டேன்.
அவருக்கு குறிப்பிட்ட நேரம் வேலை பார்க்க வேண்டும்.  பின்பு வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும்.  ஓய்வு வேண்டும்,  கொஞ்சம் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற மனோபாவம் கொஞ்சம் உள்ளவர்.
இப்போது அவரை யார் என்று தீர்மானித்து விட்டேன்.  மேலும் அவரைப்பற்றி அறிய முயற்சித்தேன்.

அவர்மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் பணியைச் செய்பவர்.
நாம் நம் பணியைச் செய்யாதபோது நாம் மகிழ்ச்சியாக இருக்க அனுமதிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் உள்ளவர்.
ஆகையால் அவர் அவருடைய பணியைச் செய்வார்.  அதுவும் மகிழ்ச்சியோடு செய்வார்.
அவர் ஒரேயடியாய 18 மணி நேரம் விடாமல் வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணக் கூடியவரல்ல.  மகிழ்ச்சியாக இருக்க கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டும் என்று எண்ணுபவர்.  வேலை காலையில் பார்க்க வேண்டும்.  மாலையில் சினிமா, டிராமா என்று சந்தோஷமாக பொழுதைக் கழிக்க வேண்டும் என்று எண்ணக் கூடியவர்.  இப்படி இருக்கும்வரை,  அவரைப் பொருத்தவரை  எந்தத் தொல்லையும் இருக்காது.  இதைத் தவிர்த்து எப்பப் பார்த்தாலும் வேலை, வேலை என்று இருந்தால், அவருக்குப் பிரச்சினை தொடங்கி விடும்.  அவருக்கு என்று நேரம் ஒதுக்காத போது வாழ்க்கையே நழுவிப் போன உணர்வு ஏற்படும்.
அவருடைய சாரம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான்.
அவருக்கு நல்ல வாழ்க்கை என்பது பூமியில் உள்ள நல்லவற்றை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பதுதான்.  கடமையைச் செய்ய வேண்டும் என்ற உணர்வு கொஞ்சம் அதற்குத் தடையாக இருந்தபோதும், வாழ்க்கையின் பெரும் பகுதி மகிழ்ச்சியாக இருக்கத்தான் என்று  நினைக்கக் கூடியவர்.

அவர் கடமையுணர்வோடு பணியாற்றக் கூடியவர்.  அவர் கடினமாக உழைக்கக் கூடியவர்.  அவருடைய வேலையை முறையாகச் செய்யக் கூடியவர்.  அதே சமயம் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு இடம் வேண்டும் என்று எண்ணக் கூடியவர்.
அவர் தன்னைப் போன்று கடினமாக உழைப்பவர்களோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார்.  அவருக்கு உழைக்காமல் மகிழ்பவர்களைப் பிடிக்காது.  பணியைச் செய்யாமல் பலனை எதிர்பார்ப்பவர்களையும் பிடிக்காது.

அவரைப்போன்று சில அம்மாக்கள் தம் பிள்ளைகளிடம் வீட்டுப் பாடத்தை எழுதிவிட்டு விளையாடப்போ,  பணியைச் செய்துவிட்டு பலகாரத்தைத் தின்னு என்று கூறுவதைக் காணலாம்.

இப்போது அந்தத் துயரர் யார் என்று புரிந்திருக்குமே!

   சில வேலைகள் அந்த மருந்தை 1 எம் வீரியத்தில் கொடுத்த பின்பு, அவருடைய சைனஸ் பிரச்சினை தீர்ந்து விட்டது.  கடந்த 4 மாதங்களாக எந்தத் தொந்தரவும் இல்லாமல் இருக்கிறார்.

யார் அவர்.........................????

 Kali nitricum 



Concepts of kali nit

Kali
 Principles, duty
 Closed
 Optimism
 Work, task
 Family

Nitricum
 Enjoyment
 Needing space, expansion
 Going out
 Congestion, explosive
 Tension
 Relaxation

 Group analysis
 The theme we get from the group analysis is: do your duty in order to be able to enjoy yourself.
They have the feeling that you are not allowed to enjoy yourself until you have done your duty.
So they do their work and they work with pleasure.
But they aren't the sort of people who work 18 hours a day.
They have to keep some space for enjoyment, for an evening out, for a trip to the cinema etc.
Everything is fine as long as they can do their duty and keep some space for themselves at the same time.
 But the problems may start if their task becomes too much for them, or starts to take up too much of their time.
Then they will get the feeling that there isn't enough space for themselves, that life is slipping by.
 A variation on this theme is the feeling that they have to enjoy life.

This may be a sort of basic theme for them.

A good life to them means a life in which they have fully enjoyed the good things on this earth. Although they do restrain themselves and do fulfil their duties, the basic thought is that enjoyment plays a major part in life.                      
  jan scholten👆

இவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 3 பழ.வெள்ளைச்சாமி



ஹோமியோபதியின் பரிமாணத்தில் 1796-இல் தொடங்கி இன்று வரை பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

நோய்க்கு மருந்து என்று தொடங்கி, இன்று மனிதனுடைய சாரம் என்ன என்பதை அறிந்து அதற்கொத்த சாரத்தை வெளிப்படுத்தும் மருந்தைத் தேர்வு செய்து மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலைக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது.
ஒட்டு மொத்தக் குறிகளுக்கு அதை ஒத்த ஒட்டு மொத்தக் குறிகளை வெளிப்படுத்தும் மருந்து உரிய மருந்து என்பதிலிருந்து, ஒட்டு மொத்தக் குறிகளின் தொகுப்பு எவ்வாறான மனிதனைச் சித்தரிக்கின்றது?  அவ்வாறான  மனிதன் இவ்வாறான குறிகளின் தொகுப்பை வெளிப்படுத்த வேண்டுமென்றால், எவ்வாறான சூழலில் இருந்திருக்க வேண்டும் ? என்பதை யூகிக்க முடிகிறது.  இவ்வாறு குறிகளின் தொகுப்பிலிருந்து ஒவ்வொரு மருந்தையும் தனிநபர்களாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டு வருடத்திற்கு முன் என்னுடைய நண்பர் ஒருவர் மூல நோய்க்காக மருத்துவம் பார்க்க வந்தார்.   வந்தவர் வந்தவுடன், """"நான் இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும், நானா அல்லது அதுவா? நானும் பல வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கிறேன்"" என்று தொடங்கினார்.

அவருக்கு இரத்த ஒழுக்கும், வலியும் உள்ள மூல நோய்.  ஆனால் அவர் நோயைப் பற்றிக் கூறாமல் ஒரு போர்க்களத்தைப் பற்றிக் கூறினார்.

""""வாழ்வா, சாவா? "" என்பது மாதிரி இருந்தது அவருடைய தொடக்கம்.  இவருடைய கூற்றிலிருந்து இவருக்கான மருந்தை யூகித்துக் கொண்டு இவரைத் தெரிந்து கொள்ள முயற்சித்தேன்.

இவரைத் தெரிந்து கொண்டு இவருக்கான மருந்தைக் கொடுத்த பின்பு இன்று வரை அவருக்கு வலியுடன், இரத்த ஒழுக்கோடு ஏற்பட்ட மூல நோய் வரவேயில்லை.  அதுமட்டுமல்ல அவருடைய நோய் எதிர்ப்பாற்றலே கூடிவிட்டது.
இவ்வாறு நான் அறிந்த மனிதரை நீங்களும் தெரிந்து கொள்ளலாமே?.

இவரைப் பற்றி ஒரு வார்த்தையில் கூறுவதென்றால் """"உறுதியானவர் "" என்று அழைக்கலாம்.  உறுதி என்பதன் பொருள் கெட்டியான, நிலையான நேர்த்தியான, தீர்மானகரமாக என்று கூறலாம்.  இவை அனைத்தும் பெற்றுள்ளவர்தான் இவர்.

அவர் சிறந்த முறையில் செயல்படவில்லை என்றால் அவர் அவருடைய இடத்தை இழக்க நேரிடும் என்ற பயம் இருந்து கொண்டேயிருக்கும்.  அவருடைய இடத்தில இருப்பதற்கு சட்டப்படியான (இயற்கையான) உரிமை இருந்தாலும்,  உண்மையிலேயே அந்த இடத்திற்கான தகுதியிருக்கிறதா என்ற எண்ணம் ஏற்படும்.

அவர் அவருடைய எல்லையைக் கடக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.  அதேபோல் இவரும் மற்றவருடைய எல்லையைக் கடக்க நினைக்க மாட்டார்.  தாம் ஒரு போதும் மற்றவர்களின் பிரச்னையில் தலையிடக்கூடாது என்பதில் சரியாக இருப்பார்.  மற்றவர்களும் இவருடைய பிரச்னையில் தலையிடுவதை விரும்புவதில்லை.  அதனாலேயே அவரிடம் உறுதியோடு இருப்பது, தீர்க்கமாகச் செயல்படுதல் போன்ற சிறப்பான குணங்களைக் காணலாம்.  இவருடைய கடுமையையும், பலத்தையும் கணக்கில் கொண்டுதான் கீழ்காணும் வாய்மொழிகள் பழக்கத்தில் உள்ளன போலும்.

   எவ்வகையான கடுமையான பணியாக இருந்தாலும், முடித்துவிடும் ஆற்றலுள்ளவர்.  கடும் உழைப்பு என்பது கூட ஒரு வகையில் ஒரு நிர்ப்பந்தத்தின் விளைவுதான்.  ஏனெனில், இவரால் எந்தவித மறுதலிப்பையும், குறுக்கீடுகளையும் தாங்க முடியாது.

இவர், இவருடைய சொந்த விருப்பத்திற்கு மாறாகச் செயல்பட அவர்தம் பெற்றோர்களால் நிர்ப்பந்திக்கப்படுபவர்.
இதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பவர்,  ஆனால் அதே சமயம் பெற்றோரை எதிர்க்கிறோம் என்ற மன உறுத்தலுக்கு ஆளாவார்.

பெற்றோர்கள் """"உனக்கு ஒன்றும் தெரியாது.  எதையும் தவறாகச் செய்வாய், உனக்கு எது சரியானது என்று நாங்கள் தீர்மானிக்கிறோம்"" என்று கூறுவார்கள்.
ஆனால் இவரோ, """"எனக்குத் தெரியும் எது சரியானது என்று.   நீங்கள் யார் எனக்கு சொல்வதற்கு? "" என்று கேள்விகளை எழுப்புவார்.   இவ்வாறான போராட்டத்திலிருப்பார்.  இவர் தாம் எப்போதும் சரியாகச் செய்வதாக நினைப்பார்.  இவருடைய பெற்றோர்கள் இவருடைய எல்லைக்குள் ஊடுருவுவதாக எண்ணுவார்.    இதற்கு எதிராக தற்காப்பு செய்தல் என்பதுதான் இவருடைய பிரதான செயல்பாடு.     இவர் தற்காப்பு அரணாக செயல்படுவார்.  இவரையும், இவரது குடும்பதையும், பாதுகாப்பது, எல்லைக்கதவாக, வேலியாக, தலைக்கவசமாக, யுத்தக் கருவியாக, கேடயமாக தற்காப்பு செய்வது   தான் இவரது முக்கியமான பணி.  இவர் எப்போதும் போர்க்களத்தில் இருப்பது போன்றேயிருப்பார்.  இவர் பொதுவாக

""""இரண்டிலொன்று விட்டேனா பார் / நானா /  நீயா /  போராடிக் கொண்டிருக்கிறேன்"" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.

இவரை யாரும் விமர்சனம் செய்வதை அல்லது இவரது கருத்தை மறுத்துப் பேசுவதை இவரால் தாங்கிக் கொள்ள முடியாது.  விமர்சனம் செய்பவரை எதிரியாக நினைப்பவர்.  இவருக்கு எதிரான விமர்சனத்தை சரியான குத்து வாங்கியதாக எடுத்துக் கொள்வார்.

இவரைப் பற்றி ஒரு வரியில் சொல்வதென்றால் இவர் தாமாகவே தேர்ந்தெடுத்த எந்த விசயத்திலும் உறுதியாக நிற்பார்.


இப்போது இவர் யார் என்று அறிந்து கொண்டீர்களா?

  பெர்ரம் மெட்டாலிகம்(FERRUM METTALICUM)
 
  எடுத்துக்கொண்ட பணியில் உறுதியாக விடாமுயற்சியுடன் கடுமையாக உழைக்கக்கூடியவர்.
  இவர்கள் அவர்கள் எடுத்துக்கொண்ட பணியில் உறுதியாக இருப்பவர்,கடுமையாக உழைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள். எடுத்துக்கொண்ட பணியை விட்டுவிடாமல் இவர்கள் தைரியத்தோடும் உறுதியோடும் நேர்மையாகவும் கட்டுறுதியோடு செய்பவர்கள்.

  எந்த வேலை என்று பேதமில்லாமல், கஷ்டமான பணிகளைக்கூட செய்ய நினைப்பவர்கள். ஒரு காரியத்தை செய்ய வேண்டுமென்று நினைத்துவிட்டால் அதனோடு தன்னைப் பிணைத்துக்கொண்டு விட்டுவிடாமல் திட்டமிட்டபடி செய்யக்கூடியவர்கள். எடுத்தமுடிவில் தீர்மானகரமாகவும் எந்தவிதத் தயக்கமுமில்லாமல் இருப்பார்கள். அவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருந்த போதிலும் தங்களுடைய சக்தியை அந்த வேலையை முறையாக முடிக்க வேண்டும் என்ற உறுதியில் தீர்மானகரமாக இருப்பதில் காட்டுவார்கள். இந்த உறுதியான நிலையை இவ்வாறான முறையில் சொல்வதைக்காணலாம். அதாவது, ‘இரும்பு மனிதன், இரும்பு ஒழுக்கம், இரும்புப்பெண்மனி(iron lady mrs thatcher)

  இவர்கள் உழைப்பினால் உருவாக்கப்பட்ட பொருட்கள் நீண்டகாலத்துக்கு இருக்கவேண்டுமென்று விரும்புவார்கள். அந்தப்பொருட்களில் அடிபட்டால் தாங்க்க்கூடியவையாக இருக்கும் அவர்கள் தாங்க்க்கூடியவர்களாக இருப்பது போல.அவர்கள் தயாரிக்கும் பொருட்கள் நாட்பட்டு உழைக்கக்கூடியதாகவும் மற்றும் பயன் உள்ளதாகவும் இருக்கவேண்டும் என விரும்புவார்கள்.
அவர்களுடைய பணி எப்போதும் கடினமானதாக இருக்கும். அது எப்போதுமே அவர்களுடைய முழு சக்தியையும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.அவர்கள் வேலை உடல் உழைப்பைப் பயன்படுத்தக்கூடிய தொழிலாக இருக்கும்.அவர்கள் கொல்லர்களாகவோ, தொழிலாளியாகவோ இருப்பார்கள். மூளை உழைப்பாக இருந்தால் அதிகப்படியான வேலையாக இருக்கும். அவர்கள் பட்டாளத்தில் சிப்பாய் தொழிலைச் செய்பவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு அந்த வேலையை முறையான வழியில் செய்வார்கள். அவர்கள் பணி பிரமாண்டமானதாக இருப்பதால் அதை செய்து முடிப்பதற்கு ஒரேவழி மிகவும் ஒழுங்கு அவசியம் என்பதை உணர்வார்கள்.
அவர்கள் சிறந்த ஒருங்கிணைப்பாளர்கள் ஆதலால் எந்த குழப்பமும் ஒழுங்கற்ற தன்மையும் அமைப்பில் இருப்பதை வெறுப்பார்கள்.

  அவர்கள் எப்போதும் தங்களைப்பற்றி வரும் விமர்சன்ங்களைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். அதை இவர்கள் நேரடியான எதிர்ப்பாக கருதுவார்கள். அதனால்அது அவர்களை கோப்ப்படுத்தும். அவர்கள் பணியை எடுத்து முடிப்பதிலேயே கவனமாக இருப்பதால் இதுபோன்றவை வேலையில் கவனம் செலுத்தாமல் திசைதிருப்புவதை விரும்பமாட்டார்கள். அவர்கள் வழியில் குறுக்கீடோ கட்டுப்பாடோ வருவது அவர்களை எரிச்சல் அடையச்செய்யும். அவர்கள் வழியில் மக்களோ அல்லது பொருட்களோ சப்தம் செய்வதையோ அல்லது குழப்பம் ஏற்படுத்துவதையோ விரும்பமாட்டார்கள். அதாவது சின்ன பேப்பர் கசங்கும் சப்தம்கூட பிடிக்காது.

  சின்ன விமர்சனம் கூட இவர்களுக்கு பெரிய அடி விழுந்தது போலத் தெரியும். ஆனால் அவர்களுக்கு உடம்பில் அடிவிழுவதையோ அல்லது விபத்து ஏற்படுவதையோ கண்டு பயம். அவர்களுக்கு சின்ன வயதில் அப்பா ஒழுங்குக்கட்டுப்பாட்டுக்காக போட்டு அடித்ததை மறக்க மாட்டார்கள். அவர்களை யாராவது விமர்சிக்கவேண்டும் என்று நினைத்தால் அவர்கள் முழுப்பல்த்தையும் பயன்படுத்தித் தாக்கிவிடுவார்கள். எதிரிகள் இவர்களுடைய அடியிலிருந்து தாங்களை காத்துக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கையை இழந்துவிடுவார்கள்.

  இவர்கள் பரீட்சைக்காக கடினமாக உழைக்க வேண்டுமென்று எண்ணுவார்கள். ஆகையால் இவர்களிடம் எப்போதும் பரீட்சைக்குப் போகும் முன் கடினமாக உழைக்கவேண்டும் என்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். அவர்கள் பாஸ் பண்ணுவதற்கு உச்சகட்டமாக உழைப்பார்கள்.அதை எளிய பணியாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.

  பணியில் சிறப்பானதை வெளிப்படுத்தாவிட்டால் அவர்கள் இடத்தை இழந்து ஒதுக்கித் தள்ளப்படுவோம் என்று உணர்வில் இருப்பார்கள். இவர்களுக்கு தற்போதுள்ள இடமானது கஷ்டப்பட்டு உழைத்ததால் வந்ததாக நினைப்பார்கள். அதுதானே வந்ததாக கருதமாட்டார்கள். அவர்கள் எப்போதும் அவர்களுடைய எல்லையை மக்கள் மதிக்க வேண்டுமென்று நினைப்பார்கள். இல்லாவிட்டால் அது அவர்களை கோபம் அடையச்செய்யும்.

 இவர்கள் தங்கள் பணியில் கொஞ்சம் கடுமையாக நடந்துகொள்வதால் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியது இருக்கும்.
இவர்கள் சக்திக்கு மீறிய பணியை எடுத்துப்போட்டுக் கொண்டு செய்வதால் அவர்களுக்கு நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும்.
மற்றொரு வகையில் இவர்களுடைய சகத்தொழிலாளர்கள் இவர்களுக்கு எதிராக திரும்புவார்கள்.
ஏனெனில் அவர்கள் இவர்களை கடும்பணிச்சுமைக்கு ஆளாக்குவார்கள், கடும் ஒழுங்குக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவார்கள்.
 இவர்கள் திட்டத்துக்கு எது தகுதியில்லையோ அதை ஒதுக்கித் தள்ளுவார்கள். இவர்கள்  மிகவும் அத்தியாவசியமானதைக்கூட ஒதுக்கிவிடுவதால் ஒருநாள் ஒட்டுமொத்தப் பணியும் நின்றுபோய்விடும்.கடைசியில் ஒட்டுமொத்தப்பணியையும் விட்டுவிடவேண்டியது இருக்கும்.
முடிவில் அவர்கள் தோல்வியடைந்துவிட்டதாக உணருவார்கள்.  

 Group analysis

 Persevering in your job: firm.
 Persistent in your task: thoroughness.
 Durable products.
 A heavy task.
 Enforcing routines: discipline.
 Meeting opposition in your work.
 Opposition through control.
 Maintaining your position to avoid failure.
 Criticism means opposition.
 Force as a profession: soldier.
 Persevering for the exam.
 Heavy control.
 Failure through using too much force.

Essence of Ferrum Metallicum

persevering in your job: firm.

@JAN SCHOLTEN

ஹோமியோபதி
HOMOEOPATHY

Tuesday 14 February 2017

இவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 2 @Pl Vellaichamy

இவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 2


சில மாதங்களுக்கு முன் என்னிடம் ஒரு கல்லூரிப் பேராசிரியர் மருத்துவம் பார்க்க வந்தார்.  அவருக்கு வலதுகால் முன் பாதத்தில் புற்று போன்ற கடினமான தசை வளர்ச்சி வலியுடன் இருந்தது.  அதற்கு அவர் பல மருத்துவர்களிடம் காண்பித்துவிட்டு என்னிடம் வந்தார்.

நான் அவரிடம் புறவயக் குறிகளை விசாரித்து விட்டு அவருடைய மனநிலை பற்றி அறிய முற்பட்டேன்.

""""தங்களுக்கு ஏதாவது கவலை இருக்கிறதா?""

  """"இல்லை"" என்று கவலையோடு சொன்னார்.

""""சார், ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.  மனிதனுடைய மனநிலையில் ஏற்படும் பிரச்சனைகள் காலப்போக்கில் பல உடல் நோய்களுக்குக் காரணமாகி விடும்.  இது உண்மை.  எனவே, தங்களுடைய கவலை, பயம், ஏமாற்றம் மற்றும் அனைத்துப் பிரச்சனைகளையும் மெதுவாகக் கூறுங்கள்.  நான் இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு எதுவும் தங்களைப் பற்றி கதை எழுதப் போவதில்லை.  எல்லாம் உங்கள் நன்மைக்குத்தான்.  உங்களுக்கு உரிய சரியான ஹோமியோபதி மருந்தைத் தேர்வு செய்யத்தான்"" என்று விவரமாகக் கூறிய பின்

""""இப்பச் சொல்லுங்க உங்களைப் பற்றி"" என்றேன்.
    """"ஆமா சார், பிரச்னைதான்""
     """"என்ன?""
      என்னை நிம்மதியாக வாழவிடமாட்டேங்கிறார் என் அப்பா.  கல்யாணமானதிலிருந்து என் மனைவி வீட்டாரிடம் வரதட்சணை, அந்தப் பணம், இந்தப் பணம் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்.  கடிதம் போடுவார், தந்தி அடிப்பார்.  அவருடைய தொல்லை தாங்க முடியவில்லை.
நீங்க ஏன் மறுக்கக் கூடாது?  முடியாது என்று சொல்ல வேண்டியது தானே?
""""அது என்னால் முடியாது"" என்று கூறினார்.
""""ஏன்?""
சிறு வயதிலிருந்தே என் அப்பா என்னை அடக்கி, ஒடுக்கி வைத்திருப்பார்.  நான் எந்த முடிவும் எடுக்க முடியாது.  ஏதாவது சொன்னால் என்னைக் கொன்றேவிடுவார்.  நான் எதிர்த்துப் பேச முடியாது.  கொடுமைப்படுத்துவார் என்று கூறினார்.
""""அப்படி என்றால் தங்கள் அப்பா மீது கோபம் உள்ளதா?""
    """"கோபமா? கடுங்கோபம் உண்டு""
""""கோபத்தைக் காட்ட வேண்டியதுதானே?""
""""கோபத்iதை மட்டுமில்லை.  நான் எந்த உணச்சியையும் காட்ட முடியாது.  நான் அவரை எதிர்த்து எதுவும் சொல்ல இயலாது.  மனதில் போட்டு அனைத்தையும் அடக்கி வைத்துக் கொண்டு இன்று வரை வாழ்கிறன்"" என்றார்.
""""தங்களுக்கு வேறு என்ன பிடிக்கும்? ""
""""எனக்கு இனிய சோகமான பாட்டுக்கள் கேட்டால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்""

நான் இப்போது அவர் யாராக இருக்கிறார் என்று அனுமானித்துக் கொண்டேன்.
நான் அனுமானித்தது சரிதானா என்று மேலும் பல விபரங்களை அறிந்து கொண்டேன்.  நான் அறிந்தவரை நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

அவருடைய சிறந்த பண்பு என்பது பிறருக்கு உதவிகரமாக இருப்பதுதான்.  இவர் பிறருக்கு உதவி செய்ய விரும்புவார்.  உதவுவது மூலம் பிறரை மகிழ்விக்க விரும்புவார்.  இவர் மற்றவர்களுடன் எளிதாக இணக்கமாகி விடுவார்.   இவர் பிறருக்கு உதவி செய்ய விரும்புவார் என்று சொல்வதை விட பிறருக்கு உதவுவது என்பது இவருக்குத் தேவையாகி விடுகிறது.  ஏனெனில் அவர் அவ்வாறு செய்யவில்லையெனில் அமைதியற்றுப் போவார்.

இவர் கூருணர்வு மிக்கவர்.  இசையிலும், கலையிலும் மிகுந்த நாட்டம் மிக்கவர்.  இவர் கேட்கும் இசைக்குத் தக்கவாறு இவருடைய துயர் மிகுவதும், குறைவதும் ஏற்படும்.  சோகமான இசையைக் கேட்கும் போது இவருடைய துயர் தணிந்து ஆறுதலாகக் காணப்படுவார்.  இவர் படுத்துக் கொண்டு சோகமான இசையைக் கேட்பதால் இவருடைய துயர் தணிவதை உணர்வார்.

இவர் பிறருக்கு உதவிகரமாக இருக்கும் அதே வேளையில் தாம் செய்யும் பணியை பிறர் அங்கீகரிக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்.  அதற்காக இவரைப் பாராட்ட வேண்டும் என்றும் எண்ணுவார்.  பிறருக்காக ஓடி, ஆடி ஓய்வின்றி உழைப்பார்.  இதற்காக அவர் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது """"இவர் நன்கு செய்தார்"" என்று சொல்ல வேண்டும் என்பதுதான்.  இவரை யாரும் குறை சொன்னால் தாங்கிக் கொள்ள முடியாது.  கடுங்கோபம் கொள்வார்.  ஆனால், அதை வெளியே காட்ட மாட்டார்.  அவர் மீது வெறுப்பு ஏற்படும்.  வெறுப்பு தோன்றினாலும் அவருடன் விரைவில் இணக்கமாகிவிட வேண்டும் என்று நினைப்பார்.

இவர் விமர்சனம் செய்வதை வரவேற்பார்.  ஆனால் அது ஆக்கத்துக்கு வழிவகுக்க வேண்டுமேயொழிய அழிவுக்கு அல்ல.  """"பலவீனப்படுத்தவதாக இருக்கக் கூடாது"" என்று கூறுவார்.  இவரும் விமர்சனம் செய்வார்.  ஆனால் அது ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.

இவருக்கு, இவருடைய தகுதி என்ன? திறமை என்ன? என்பது பற்றி தெரியும்.  ஒன்றை தயக்கத்தோடு தொடங்குவார்.  தன்னுடைய அறிவையும், ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள விரும்புவார்.  அதற்காக அதிகமான பயிற்சிகள் பெற வேண்டும் என்று எண்ணுவார்.  தனக்கு ஒரு குரு (அல்லது) ஆசிரியர் வேண்டும்.   அப்போதுதான் இவர் செய்வது தவறா? சரியா? என்று சொல்வார்கள்.  யாராவது இவர் செய்வது சரிதான் என்று கூறவதை விரும்புவார்.  இவ்வாறு சொல்வது, ஏதோ இவர் புதிதாகக் கற்றுக் கொள்வது போல் திருப்தி அளிக்கும்.

இவர் மேலாதிக்கம் செய்யும் பெற்றோரின் குழந்தை.  இவரை இவர் பெற்றோர்கள் அடக்கி ஒடுக்கி வைத்திருப்பார்கள்.  இவருக்கு எதுவும் தெரியாது.  எதற்கும் லாயக்கற்றவன் என்று திட்டுவார்கள்.  இவ்வாறு அடக்கப்பட்டு வாழ்வதால் தான் யார்? என்று கூட உணர முடியாதவராய், துணிச்சல் அற்றவராய் இருப்பார்.  தன்னை அவமாமனப்படுத்துபவர்களை, அடக்குபவர்களை பழிவாங்க நினைப்பார்.  ஆனால், அதற்கான பலமில்லாதவராய்  இருப்பதாக நினைத்து அவர்கள் மீது உள்ள கோபத்தை, கசப்பு உணர்வை அடக்கி வைத்துக் கொள்வார்.

கோபத்iதை எப்போதும் காட்ட மாட்டார்.  இவர், மேலாண்மை செய்கின்ற பெற்றோhன் பிள்ளையாக இருப்பதால், கூச்சமிக்கவராகவும், கவலை, பயம், நடுக்கமுள்ளவராகவும் இருப்பார்.  தன் மீதும், தன் நிலை மீதும் திருப்தியற்று இருப்பார்.

அவர் சோகத்தோடு யாருடனும் பேசாமல் தன் நிலையை நினைத்துப் புலம்பிக் கொண்டே இருப்பார்.  தாம் புண்படுத்தப்பட்டதாகவும், ஒடுக்கப்பட்டதாகவும் நினைத்தாலும், பதில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், உணர்வுகளை உள்ளடக்கி மௌனமாக இருப்பார்.  இவருடைய முகம் எப்போதும் ஆழ்ந்த சிந்தனையோடும், கசப்பு உணர்வோடும் இருப்பதை வெளிப்படுத்தும்.  இது சிலருடைய உள்ளமுக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு என்பது தெரிய வருகிறது.

நான் அவரை அறிந்து கொண்டு அவருக்கான    மருந்தை  10m வீரியத்தில் இரண்டு வேளைக்கு கொடுத்த பின்பு அவர் நோயிலிருந்து விடுபட்டது மட்டுமின்றி அவர் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டது.

யார் அவர்????

.................????!!!!!⏯
மங்கானம்
   manganum 

 Essence: Sensitive people who do their best for others and hope to get appreciated for their efforts. 

 Mind: The first characteristic trait is that Manganum people tend to want to please everybody; they are always busy taking care of others. 
They are also very sensitive and artistic. 
Their moods can change depending on the kind of music they are listening to. 
They are highly sensitive to the needs of those around them, to decide what they can do to help (DD Carc). 
As a child they tend to take responsibility at an early age. Their sensitivity may come out as clairvoyance. 
 They tend to be busy and restless (DD Zinc). This may be expressed in trembling or restlessly walking up and down. 
 However, they want to be appreciated for all the things they do for others.
 If somebody happens to hurt them or insult them they get very angry (DD Staph, Coloc). 
But they will keep dreaming of a reconciliation. 
They may get a constant frown on their face or a bitter expression, as a sign of what is going on inside them.
 Then they will withdraw and avoid company.
 This shows that they are easily hurt and tend to sulk. 
 When they feel gloomy and bad tempered the only thing that helps is lying down and resting. 

 Vrijlandt (1990, page 185) gives us a typical example of a Manganum woman who has organised a party and who is only content when she hears the next day that her guests thought it a great success. 
Here again we find the theme of doing your best and wanting to be complimented on it. 

 At a later stage they develop difficulty in thinking. Also fears that something will happen, haunting fears about trivial matters. 

@jan scholten                        

 Manganum situation

The Manganum situation is that of a shy child of dominating parents.
 The child has a lack of confidence as a result of this domination, and becomes anxious, nervous, tense, jittery and frightened.
 He develops a feeling of bitterness towards his parents and is discontent with himself and with his situation.
 He becomes sad, reserved, taciturn, brooding. Towards his parents he feels hatred, wants to take revenge, but he cannot. 

This situation is not an extreme one, as in Aurum or Mercurius but a situation that is tolerable and so you do not find here the themes of suicide or revolution, but rather a suppression - he becomes reserved and all his feelings are pent up.
 He feels offended, feels harassed and has to defend himself. 
He has to be strong enough to put up with things.

 So we find that the main theme of Manganum is suppression. 

@Rajan Sankaran                        

Concepts of manganum 

peridic table
 Stage 7 :
 Fine tuning 
 Training Practice 
 Doubts 
 Learning Teaching 
 Feedback 
 Compliments 
 Cooperation 
 Helping 

 Ferrum series :
 Task Work Duty 
 Craft Use 
 Ability Perfection 
 Routine Order Rules 
 Control Exam 
 Observed Criticised 
 Failure Guilt Crime 
 Pursued 
 Adult 
 Village 

 Group analysis 

 Fine tuning your abilities. 
 Feedback on your abilities. 
 Taught by professionals: help. 
 Likes compliments to know they haven't done it wrong. 
 Help in checking things over. 
 Practising for the exam. 
 Criticism gives a feeling of failure. 
 Feeling pursued by criticism. 

 Essence of Manganum  

  training for the task. 

@jan scholten

# ஹோமியோபதி
HOMOEOPATHY

Monday 13 February 2017

ஹோமியோபதி - ஒரு புதிய பார்வை பழ.வெள்ளைச்சாமி

ஹோமியோபதி - ஒரு புதிய பார்வை

PAZHA.VELLAICHAMY

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஜான்ஸ்கால்ட்டன் ஹோமியோபதிக்குச் செய்து வரும் பணி மிகச் சிறப்பானது.
அவர் தாம் எழுதிய இரண்டு  புத்தகங்களிலும்  (1 .HOMOEOPATHY AND MINERALS. 2.HOMOEOPATHY AND ELEMENTS).  தனிமங்களின் அணு எண்படியான பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, மனிதனுடைய பல்வேறு நிலைகளை, கருவுற்றதிலிருந்து அவன் அந்திமக் காலம் வரை விவரித்துள்ளார்.  ஒவ்வொரு நிலையும் தனியானது போல் தோன்றினாலும் அது தனியானது அல்ல.  அது அடுத்து வரும் நிலையால் மறுக்கப்பட்டு அது அறாத் தொடர்ச்சியாக ஏழு நிலைகளை மனித வாழ்வு எய்துவதைச் சிறப்பாகக் கூறியுள்ளார்.
.
.
தனிமங்களுக்கும், மனித வாழ்வுக்கும் உள்ள உறவை அவர் தனிமங்களின் அணு எண். அடிப்படையில் ஆய்வு செய்து கூறியிருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது.  அதன் சிறப்பை மேலும் அறிந்து கொள்ள இன்னும் ஆழமாக தனிமங்களின் வேதியியலைப் படிக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தாமல் வலியுறுத்துகிறார்.
.
     இவ்விரு புத்தக்கங்களையும் எழுதுவதற்கு தனிமங்களைப் பற்றியும், மனித வாழ்வைப் பற்றியும் மிகவும் ஆழமாகப் பரிசீலித்துள்ளார்.  ஆனால், அந்த ஆய்வு போதியளவு விளக்கப்படவில்லை.  அதனால், அவர் ஆய்வு முறை பலருக்குக் குழப்பத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இருப்பினும், இவ்விரு புத்தகங்களின் பயன் மிகச் சிறப்பாக உள்ளது.
ஹோமியோபதியில் நோய்க்கு மருந்தல்ல.  மனிதனுக்குத்தான் மருந்து என்று கூறுகிறோம்.  அதனால், ஒவ்வொரு மனிதனிடத்திலும் குணப்படுத்த வேண்டியது எது என்பதையும், அதே போல், ஒவ்வொரு மருந்திலும் குணப்படுத்துவது எது என்பதையும் அறிய விழைகிறோம்.
மேற்கூறியபடிதான் டாக்டர் ஹானிமன் முதல் இன்று வரை  தூய  ஹோமியோபதியைச் செய்பவர்கள்    செய்து வருகிறார்கள்.  அவர்கள் அனைவரும் ஒவ்வொரு மருந்தையும் ஒரு செயற்கை நோயாளராகப் பார்த்தார்கள்.  ஒவ்வொன்றின் தனித்துவத்தின் அடிப்படையில் அவைகள் வேறுபடுத்தி பார்க்கப்பட்டன.
.
ஆனால், ஸ்கால்ட்டன் அவர்கள் யாரும் இதுகாறும் பார்க்காத புதிய கோணத்தில் மருந்துகளைப் பார்க்கிறார்.  ஒவ்வொரு மருந்தையும் ஒவ்வொரு மனிதனாகப் பார்க்கிறார்.  ஒவ்வொரு மனிதனும் தனித் தன்மையானவன்தான் என்றாலும், அந்தத் தனித் தன்மை கூட திடீரென்று தோன்றிது இல்லை.  அது மனித உறவுகளைச் சார்ந்தது என்பதையும் மனித உறவுகளில் ஏற்பட்ட முரண்பாடுகளின் விளை பொருள்கள்தான் என்பதையும் மிகவும் சரியாக உள்வாங்கி எழுதியுள்ளார்.
அவர், அதனால் ஒவ்வொரு மனிதனையும் தனி மனிதனாக மட்டும் பார்க்காமல் குடும்பம், சமூகம் சார்ந்தவனாகப் பார்க்கிறார்.  எந்த ஒரு மனிதனும் தனியாக வாழ முடியாது என்பதையும், அவனுடைய வாழ்நிலை அவனால் மட்டும் தீர்மானிக்கப்படவில்லை என்பதையும், அது சமூக உறவுகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் மிகச் சரியாகப் பரிசீலித்து இருக்கிறார்.
.
ஒரு மனிதனுடைய மனமானது ஒவ்வொரு மனிதனுக்கும் திடீரென்று வந்ததாகவோ அல்லது பிரபஞ்ச மனத்திலிருந்து வந்ததாகவோ கருதப்படுவதைப் புறக்கணிக்கும் வண்ணம், ஒவ்வொருவருடைய மனமும் அவனுக்குள் உள்ள அக முரண்பாடுகளின் விளைவாகவும், அவனுக்கும், பொருளியல், அரசியல்  சார்ந்து குடும்ப, சமூக உறவுகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாகவும் தோன்றியது தான்  என்பதை மிகச் சரியாகப் புரிந்துள்ளார்.
.
எனவே, ஒரு தனிமனிதனைப் புரிந்து கொள்ள அவனை மட்டும் புரிந்து கொண்டால் போதாது.  அவன் குடும்பத்தை, அவன் வாழும் சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.  அவனுக்கும், அவன் குடும்பத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் அவனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் புரிந்து கொண்டு, அந்த முரண்பாடுகளின் விளைவாக அவன் மன நிலையில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் அவனைத் தனித்துவப்படுத்திப் பார்க்க வேண்டிய அவசியத்தை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.
.
அவர்மருந்துகளை
அன்னையாக,
தந்தையாக,
பிள்ளைகளாக,
சகோதர - சகோதரிகளாக,
நன்பர்களாக,
தொழிலாளியாக,
கலைஞனாக,
அறிஞனாக,
தலைவனாக
மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினராகவும் பார்க்கிறார்.
ஏனெனில் மனிதன் சமூக விலங்கு என்பதை உணர்ந்துள்ளார்.
ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள அவனைத் தனியாகப் பார்க்க முடியாது.  அவனுக்கும்- குடும்பத்திற்கும்,
அவனுக்கும்-சமுகத்திற்கும்,
அவனுக்கும்-தொழிலுக்கும்,
அவனுக்கும்-கலைப் படைப்புகளுக்கும்,
அவனுக்கும்-ஆளுமைக்கும்
உள்ள தொடர்பை அறிந்து கொள்ளாமல் அவனைப் புரிந்து கொள்ள முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்துள்ளார்.
.
அவர் ஓர் உண்மையைச் சொல்லுகிறார்.  ஒரு அலோபதி மருத்துவருக்கு நோய்க் கூறு இயலையும், நுண்ணுயிரி இயலையு எவ்வளவு ஆழமாகப் படிக்க வேண்டுமோ அதைவிட ஒரு ஹோமியோ மருத்துவர் மனிதனையும், சமூகத்ததையும் மிக ஆழமாகப் படிக்க வேண்டும்.  சிறந்த சமூக அறிவு இல்லாமல் ஒரு நல்ல ஹோமியோ மருத்துவராக இருக்க முடியாது என்பதை இவர் நூல்கள் சிறப்பாகக் கூறுகின்றன.
.
இவர் இவ்வாறு மருந்துகளைப் பார்ப்பதற்கு ஆதாரங்களை எவ்வாறு திரட்டினார் என்பதற்கு போதிய விளக்கங்கள் இல்லை.  பல சமயம் புதிராக இருக்கிறது.  இருந்தாலும், அவர் கூறியபடி மருந்துகள் பயன்படுத்தப்டும்போது அவைகள் மிகவும் சிறப்பாக குணமளிக்கின்றன.
ஒரு மனிதனுக்கு நோய் தோன்றிய காலத்தில் அவனுக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் உள்ள முரண்பாடு என்ன என்பதை அறிந்து, அந்த முரண்பாட்டின் விளைவாகத் தோன்றிய நிலைப்பாட்டுக்கு (state) தகுந்த மருந்தைத் தேர்வு செய்தால், அந்த மருந்து அவனுக்கு உரிய மருந்தாகிறது.  அவனை நலப்படுத்துகிறது.
.
ஜான் ஸ்கால்ட்டனைப் பின்பற்றும்போது குறிகளுக்குக் (symptoms) கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து விடுகிறது.
மருந்துகாண் ஏட்டைப் பயன்படுத்தத் தேவையில்லை.  
ஒட்டு மொத்தக் குறிகளைக் காண வேண்டிய அவசியமில்லை.
மியாசம் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை.  துயரரை அறிவது எளிமையாக்கப்படுகிறது.
.
     ஆக,  ஜான் ஸ்கால்ட்டன் ஹோமியோபதித் துறையின் புதிய சகாப்தம்.  அவருடைய ஆய்வு முறையை மேலும் செழுமைப்படுத்தும்போது ஹோமியோபதி மேலும் சிறப்படையும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.


இவரை கண்டுபிடியுங்கள் 1 பழ.வெள்ளைச்சாமி



 சில மாதங்களுக்கு முன்பு ஒர் இளைஞன் என்னிடம் வந்தார்.  அவருக்கு ஆஸ்துமா நோய்.  அவருக்கு இந்த நோய் 6 வருடங்களாக இருப்பதாகக் கூறினார்.

அவருடைய நோயையும், அகநிலை முதன்மைக் குறிகளையும், புறநிலை முதன்மைக் குறிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அவருக்கு ஒரு மருந்து தேர்வு செய்து கொடுத்தேன்.  ஆனால்அவருக்குச் சரியான மாற்றம் ஏற்படவில்லை என்று இரண்டு வாரத்தில் திரும்பி வந்தார்.

நான் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்த துயரர் ‘சரியில்லை’ என்று கூறியவுடன் எனக்குக் கொஞ்சம் மனச் சோர்வு உண்டாகியது.

நான் மறுபடியும் அவருடைய கேஸை ஆய்வு செய்தேன்.

""""தம்பி நீங்க இப்ப என்ன செய்றீங்க ?""
""""நான் BE. கம்ப்யூட்டர் படிக்கிறேன்"".
இதை நீங்கள் விரும்பிப் படிக்கிறீர்களா?  அல்லது வீட்டில் படிக்கச் சொன்னாங்களா?
""""இது விருப்பம் உண்டு, விருப்பம் இல்லைங்கிறதைப் பற்றியதாக இல்லை.  ஏதே கம்ப்யூட்டர் படிச்சா வேலை கிடைக்கும் என்றுதான் படிக்கிறேன்""
சரி படித்துவிட்டு என்ன செய்யலாம்னு உத்தேசம்?
அமெரிக்கா போகனும்.
ஏன் இங்கே நல்ல வேலை கிடைக்காதா?
கிடைக்கும்.  ஆனால் சம்பள என்ன சார் தரப் போறாங்க?கூடப் போனா ரூ.10,000/- தருவாங்க.  இதை வைத்து என்ன செய்வது?
என்ன தம்பி! ஆரம்பத்திலே இது நல்ல சம்பளம்தானே?
இதை வைச்சு என்ன சார் பண்ணுவது?  இதுவே அமெரிக்காவா இருந்தா ரூ. 1 1/2 இலட்சம் சம்பளம் கிடைக்கும்.
என்னதான் அமெரிக்காவில் சம்பளம் அதிகம் கொடுத்தாலும், நம்ம நாட்ல இருக்கிறாப்போல இருக்குமா தம்பி?
நாடு இருக்கட்டும் சார், பணம் வேணும் சார்.
என்ன தம்பி பணத்திற்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறீங்க?
பணம் இல்லாவிட்டால் எவன் சார் மதிக்கிறான்?   நல்லா பணம் சம்பாதிச்சு நல்ல பங்களா, கார் எல்லாம் வாங்கனும் சார்.  அப்பத்தான் நமக்குன்னு ஒரு அந்தஸ்து கிடைக்கும்.  எல்லாத்துக்கும் பணம் தான் சார் வேணும்.

இப்போது இவருடைய பேச்சிலிருந்து இவரைப் புரிந்து கொண்டேன்.
இவருக்கு வேண்டியது அந்தஸ்து, பங்களா, கார், ஆடம்பர வாழ்க்கை எல்லாவற்றிற்கும் பணம்.

மேலும் இவரை அணுகிப் பார்த்ததில் இன்னும் பல விவரங்கள் கிடைத்தன.  இப்போது அவரை யார் என்று நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
இவரை யார் என்று புரிந்து கொண்டு அந்த மருந்தைக் கொடுத்த பின்பு அவருக்கு ஆஸ்துமா உடனடியாக நின்று விட்டது.   அதற்குப் பிறகு ஆறு மாதம் 
ஆகயும் இன்னும் ஆஸ்துமா வரவே இல்லை.

மற்றவர்கள் தம்மை """"வசீகரமற்றவர்கள்"" என்று நினைத்து விடுவார்கள் என்ற பயம் இவருக்கு இருந்தது.  இவருடைய சமூக அந்தஸ்து குறித்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பயப்படுவார்.  இந்த உலகத்திற்குப் பிரகாசமாகத் தெரிவது போன்ற ஆடம்பரமான வேலையில் அமர விரும்புகிறார்.  தம்மை மற்றவர்கள் மட்டமாக நினைத்து விடுவார்கள் என்ற பயம்.  """"என்னுடைய அந்தஸ்து குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்?  போதிய பணம் உள்ளதா? நான் பார்ப்பதற்கு வசீகரமாக உள்ளேனா?"" போன்ற கேள்விகள் இவருக்கு எழுந்துகொண்டே இருந்தன.

இவருக்கு தாம் ஏழையாகி விடுவோம் என்ற பயம்.  பணத்தில், அந்தஸ்த்தில், அழகில், வசீகரத்தில் குறைந்து விடுவோமோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.  இவருக்கு எதிலும் முடிவு எடுக்க முடியாமல் இருப்பதிலிருந்து இவர் பாதுகாப்பற்ற தன்மையால் பயப்படுகிறார் என்று விளங்கியது.

மற்றவர்கள் குறை சொன்னால் இவர் மிகவும் பாதிக்கப்படுவார்.  இவரை மற்றவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற பயம்.  வாழ்க்கையில் எந்தெந்த வகையில் வசீகரமாக இருக்க முடியுமோ அந்த வழி முறைகளையெல்லாம் பின்பற்றிப் பார்ப்பார்.    அவருடைய எண்ணம், பகட்டான பதவி, அந்தஸ்து பற்றியே அதிகமாக இருக்கும்.  நாம் கவர்ச்சிகரமான வேலையில் இருக்க வேண்டும் என நினைத்தார்.  பார்ப்பதற்கு நேர்த்தியாகவும், கவர்ச்சியாகவும் தாம் தோன்ற வேண்டும் என்று விரும்புவார்.  இந்த சமூகத்தில் எடுப்பாக, பார்வைக்கு அழகாக, ஒருவரை கவரக்கூடிய அளவுக்கு வசீகரமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்.  அவருடைய நினைப்பு எல்லாம் பணத்தைப் பற்றித்தான்.  அதிகமாக பணம் இருந்தால் சமூகத்தில் மதிக்கப்படுவோம் என்ற எண்ணம்.  கார் வாங்க வேண்டும், பிரகாசமான ஆடை, வீடு முதலியவை வேண்டும்.  அப்போதுதான் மற்றவர்களைக் கவர முடியும் என்று நினைப்பவர்.

நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல அழகுள்ளவர்களைப் பார்க்கும்போதெல்லாம் தாம் மட்டமாக இருப்பதாக நினைப்பார்.

இப்படிப்பட்டவரிடம் உள்ள பயமும், பாதுகாப்பின்மையும் பல விளைவுகளுக்குக் காரணமாக இருக்கின்றன.  முதலில் அவர் மற்றவர்களிடம் பழகுவதைக் குறைத்துக் கொள்வார்.  மற்றவர்கள் இவரைப் பற்றிக் கவலைப்படாதது  போல பாசாங்கு செய்வார்.  எல்லாத் தொடர்புகளையும் தவிர்த்து விடுவார்.

இவருக்கு தாம் பிரகாசமாகவும், மினுமினுப்பாகவும் இருக்க உதவுகின்ற பொருளை இழந்து விடுவோம் என்ற பயம் இருக்கும்.  குறிப்பாக பணத்தை இழந்து விடுவோம் என்ற பயம் இருக்கும்.  ஏனெனில், அது தான் இவருக்கு நலமான ஆடை, அணிகலன்கள், பளபளப்பான கார் முதலியவை வாங்க உதவும்.

இவருக்கு பளபளப்பான தோற்றம் போய் விடுமோ என்ற பயம் இருக்கும்.  இவருடைய தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்.  எடுப்பான தோற்றம் இருந்தால்தான் பொது மக்கள் மத்தியில் பகட்டாக திரிய முடியும் என்று எண்ணுவார்.

அவர் தம் பாதுகாப்பும், ஆதரவும் ஸ்திரமற்றதாகவும், நம்ப இயலாததாகவும் இருப்பதாக உணர்வார்.  அதனால் முழுமையான பாதுகாப்பைக் கடுமையாகவும், உறுதியாகவும் இருப்பதன் மூலம் பெற முடியும் என்று எண்ணுவார்.

மேலும் ஏதோ இழப்பு ஏற்படப் போவதாக உணர்வார்.  தொழில் நொடித்து விடப் போதாகவும், அதனால் எல்லாப் பணத்தையும் இழந்து விட நேரிடும் என்று பயப்படுவார்.  பணம் ஒன்றுதான் இவருக்கு பாதுகாப்பு அளிக்கும் என்றும், எவ்வளவுக்கெவ்வளவு பணம் சேமிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு எல்லா பயத்தையும் போக்க முடியும் என்றும் உணர்வார்.

இவருடைய பாதுகாப்பற்ற தன்மையை இவரின் உறவு முறைகளிலும் காண்பார்.  இவர் உறவுகள் ஸ்திரமற்றதாகவும், இவர் சார்ந்துள்ள உறவு முறை முறிந்துகூட போகும் என்றும் எண்ணுவார்.  இதனாலேயே சுதந்திரமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்வார்.  இவர் முற்றிலும் சுதந்திரமானவராகவும், பலமானவராகவும் இருப்பார்.  இவருக்குப் பல நண்பர்களோடும், மக்களோடும் தொடர்பு இருந்தாலும், இவர் தன்னைச் சார்ந்து இருப்பதையே விரும்புவார்.  

இவர் கடும் உழைப்பாளியாகவும், அவருடைய பொருளாதார அபிவிருத்திக்கு பலமான அடித்தளம் அமைப்பவராகவும் இருப்பார்.  இவரிடம் எப்போதும் தம்முடைய பாதுகாப்பு மற்றும் கட்டுமானங்கள் சிதைந்து விடும் என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.  இந்தப் பேரழிவு இவரை போண்டியாக்கிவிடும் என்று எண்ணுவார்.

இவர் நல்ல ஒழுங்கமைவான செயல்திறம் மிக்கவர்.  இவருடைய குறிப்புகள் முறையாக எழுதப்பட்டிருக்கும்.  ஒரு விஷயத்தைக் கருத்துக்களின் அடிப்படையில் வகைப்படுத்தி முழுமையாக வரிசைப்படுத்தி சொல்லக் கூடியவர்.  எழுதுகின்ற விஷயத்தை ஒரு தாளின் குறைவான பகுதியில் எழுதி விட்டு எஞ்சிய தாளைக் கிழித்து விடுவார்.

அவர் அவருடைய சொத்துக்களையும், உடைமைகளையும் நன்கு பத்திரமாக வைத்துக் கொள்வார்.  அவர் உடல் நலத்தையும், தொழிலையும் சீராகப் பராமரிப்பார்.  உறுப்பு படிப்படியாக செயல் இழக்கும் தன்மையான நோய்கள் உருவாகும்.  (உதாரணம் கண்புறை நோய், எலும்பு மூட்டு வேக்காடு நோய்) தம் உறுப்பு முழுமையாகப் பழுதடைந்து விட்டால் என்ன செய்வது என்பது பற்றி சதா சிந்தித்துக் கொண்டே இருப்பார்.  முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்வார்.  அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லாத போதும் பாதுகாப்பு நடவடிக்கையாக சிகிச்சையைத் தொடர்வார்.  அவர் சொல்வார் """"அது சரி, இழந்த பகுதி போகட்டும், இனிமேல் இருப்பதையாவது இழந்து விடாமல் இருப்பதற்கு சிகிச்சை அளியுங்கள்"" என்பார்.

இவருக்கு தம் உறவினர்கள் இறந்து போவது போன்ற கனவுகள் தோன்றும்.  ஏனெனில் இவர் பொருளாதார ரீதியாக யாரைச் சார்ந்து இருக்கிறாரோ அவர் இவரைக் கைவிட்டு விடுவார் என்ற பயம் இருக்கும்.  அன்பும், பராமரிப்பும் செலுத்தும் நபர்கள் கைவிட்டு விடுவார்கள் என்ற பயம் இருக்கும்.
இவர்பொருளாதார ரீதியாகவும், உறவு முறையிலும், பாதுகாப்பாக இருப்பதற்கான முயற்சியில் தோல்வி அடையும்போது, இவர் முழுமையாக, உறுதி குலைந்து முடிவெடுக்க முடியாத, எளிதில் பாதிப்படையும் தன்மையுடன் உதவியற்றவராவார்.  மனதில் சோர்வு ஏற்பட்டு ஊக்கம் குறைந்து எல்லாவற்றையும் இழந்த நிலைக்கு வந்து விடுவார்.


இப்போது இவர் யாரென்று தெரிகிறதா? 
..
..
....

......?????????

இவர் தான் கல்கேரியா ஃப்ளோர்

கல்கேரியா ஃப்ளோரின் கரு:

Calcarea

 What do others think
 Sensitive to criticism
 Insecurity
 Shyness
 Fears
 Protection
 Withdrawal
+

 Fluor

 Glamour and glitter
 Money, cars, clothes
 Sex
 Hard, hurried, fluent
 Psychopathic
 Superficial contacts

calc flour
@jan scholten
HOMOEOPATHY AND MINERALS
# ஹோமியோபதி

Saturday 4 February 2017

மனமது செம்மையானால்... மருந்தது தேவையில்லை


 
மனமே நோயாக இருக்கிறது. இந்த அடிப்படை உண்மையை கிழக்கத்திய நாடுகள் கண்டறிந்து இருக்கின்றன.
 அதே சமயம் மேற்கத்திய நாடுகள், மனம் ஆரோக்கியமாகவும் நோயுடனும் இருக்க முடியும் .என சொல்கின்றன.
.
மேற்கத்திய மனோதத்துவவியல் இதைச் சார்ந்திருக்கிறது. மனம் என்பது ஆரோக்கியமாகவும், இருக்க முடியும் அல்லது நோயுற முடியும். ஆனால் கிழக்கத்திய நாடுகள் மனம் என்பது அது இருக்கிறபடியே அப்படியே நோயாக இருக்கிறது, அது ஆரோக்கியமாக ஆக முடியாது என்று கூறுகிறது. எந்த மன நல மருத்துவரும் உதவ முடியாது. உச்சகட்டமாக நீங்கள் இயல்பாகவே நோயுறச் செய்ய முடியும். ஆகையால், மனதில் இரண்டு வகையான நோய்கள் இருக்கின்றன. அது இயல்பாகவே நோயுற்று இருக்கிறது. அதாவது சுற்றியுள்ளவர்கள் நோயுற்று இருப்பது போலவே அதுவும் அதுவாக நோயோடு இருக்கிறது. அல்லது இயல்பு மீறி நோயாக இருக்கிறது. அதாவது நீங்கள் ஏதோ அபூர்வத் தன்மையோடு இருக்கின்றீர்கள். உங்களிடையே நோய் சாதாரணமானதாக இருக்கவில்லை அது பிரத்தியோகமானது. உங்களுடைய நோய் தனியானது. எல்லோருக்கும் பொதுவானது இல்லை. அதுமட்டுமே வேறுபாடாகும். மனது இயல்பாக நோயுற்று இருக்கிறதோ அல்லது இயல்பு மீறி நோயோடு இருகிறதோ ஆனால் எப்போதும் நோயோடு இருக்கிறது. அது ஆரோக்கியமாக இருக்கவில்லை. ஏன்?
 .
கிழக்கத்திய நாடுகள் சொல்கிறது அதாவது மனம் இயல்பிலேயே ஆரோக்கியமற்றதாக உள்ளது.
 .
ஆரோக்கியம் என்ற வார்த்தை மிகவும் அழகானது. இது முழுமை என்ற வேர் சொல்லில் இருந்து வந்துள்ளது. ஆரோக்கியம், குணமாதல், முழுமை மற்றும் புனிதம் என்ற வார்த்தைகள் எல்லாமே அதே வேர் சொல்லில் இருந்து வந்தவைதாம். மனமானது ஒரு போதும் ஆரோக்கியமாக இருக்க முடியாது. ஏனெனில் அது ஒருபோதும் முழுமையாக இருந்ததில்லை. மனமானது எப்போதும் பிளவுபட்டிருக்கிறது. அதனுடைய அடித்தளமே பிளவோடு இருப்பதுதான். அது முழுமையாக இருக்க முடியாதபோது அது எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும்? மேலும் அது ஆரோக்கியமானதாக இல்லாதபோது அது எப்படி புனிதமானதாக இருக்க முடியும்? எல்லா மனங்களுமே புனிதமற்றதுதான். புனிதமான மனம் என்று அப்படி ஒன்றும் கிடையாது. ஒரு புனிதமான மனிதன் என்பவன் மனம் இல்லாமல் இருப்பவன். ஏனெனில் அவன் பிரிவினை இல்லாமல் வாழ்கிறான்.
.
..
ஒரு நோய் அல்லது எந்த நோயும் முதலில் மனிதன் ஆழத்திலிருந்துதான் தோன்றுகின்றன. மேலும் அதன் பிறகுதான் உடலை நோக்கி நகர்கிறது. அது உடம்பில் தோன்றுவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் அது நீண்ட தூரமாக இருக்கிறது.
 ..
நோய் மனதில் இருக்கும்போது அறியப்படாமல் இருக்கிறது. எப்போது அது உடம்பின் வேரில் பலமாக அடிக்கிறதோ அப்போதுதான் உணரப்படும். நீங்கள் நோயை எப்போதும் உடம்பில்தான் உணர்வீர்கள். ஆனால் அது எப்போதும் மனதில்தான் தொடங்குகிறது. ஆனால், அப்போது உணர்வதில்லை. ஆகையால் அந்த நிலையில் அதை நீங்கள் ஒன்றும் செய்வதற்கு இயலாது. அது எப்போது மனதிலிருந்து உடம்பிற்கு வருகிறதோ, அப்போதுதான் சில உதவிகளுக்கு மருத்துவரை நாட ஆரம்பிக்கின்றீர்கள்.
 ..
மருத்துவர் அதை உடம்பில் பார்க்கின்றார். ஆகவே அந்த உடம்பிற்குச் சிகிச்சை அளிக்க ஆரம்பிக்கின்றார். அது உடம்பில் இருக்கும்பொழுது சிகிச்சையளிப்பதால் அது வேறு ஒரு நோயாக வடிவெடுக்கிறது. ஏனெனில், அந்த நோய் எங்கே தோன்றியதோ அந்த ஆதார மையத்திற்கு சிகிச்சையளிக்கப்படுவதில்லை. இவ்வாறு செய்வதால், நீங்கள் விளைவை மாற்றுகிறீர்கள். ஆனால் அடிப்படைக் காரணத்திற்கு சிகிச்சை அளிப்பதில்லை. இதற்குப் பதிலாக நீங்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தினால், அப்போது நோயான உடம்பில் இருந்து உடனடியாக மறைந்து விடுகிறது.
..
நவீன ஆய்வானது எப்படி மன ஆற்றலை தூண்டுவதன்மூலம் மனதில் மாற்றத்தைக் கொண்டுவந்தால், ஒவ்வொரு நோயும் நிலை மாறுகிறது, மாற்றப்பட்டு குணப்படுத்தப்படுகிறது என்று ஒவ்வொரு நோயிலும் நிரூபித்து இருக்கிறது. அதேபோல், மனதில் மாற்றம் என்பதுதான் நோய் என்பதும் உண்மையாகிறது. மனது, மன ஆற்றல் தூண்டுவதை ஏற்றுக் கொள்ளும்போது நோய் உருவாக்கவும்படுகிறது.
.
.
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு ஒருவர் ஒரு முக்கியமான கட்டுரையை அனுப்பியிருந்தார். அதில் கலிபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவர், கற்பனையில் மட்டுமே பல கான்சர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து இருக்கிறார். இது கதவைத் திறந்து விட்டதற்கான முதல் அறிகுறி... ஒரு துயரரை அல்ல பல துயரர்களை நலமாக்கியிருக்கிறார். அவர் செய்ததெல்லாம் துயரர்களை கற்பனை செய்யச் சொல்கிறார். அதாவது உடம்பில் உள்ள ஆற்றல்கள் எல்லாம் தொண்டைக்குச் செல்கிறது. தொண்டைச் சுரப்பிகள் அந்த ஆற்றலால் தாக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அதாவது உடம்பின் பல பகுதிகளில் இருந்து புறப்பட்ட அம்புகள் தொண்டையை நோக்கிச் சென்று நோயைத் தாக்குகின்றன. இப்போது மூன்று அல்லது நான்கு வாரங்களில் சுரப்பியானது வெறுமனே எந்தவித அடையாளத்தையும் விட்டுச் செல்லாமல் மறைந்து விடுகிறது. ஒரு கான்சர் குணப்படுத்த முடியாததாக எண்ணப்படுகிறது.
கான்சர் என்பது ஒரு நவீன நோய். இது வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம், மன இறுக்கம் மற்றும் கவலைகளால் தோன்றச் செய்கிறது. உண்மையில் சொல்லப் போனால் இது நாள் வரைக்கும் உடம்பின் மூலம் இதற்கு குணம் என்பது கிடையாது. கான்சருக்கு மனதின் வழியாக சிகிச்சையளிக்க முடியும் என்றால் அப்போது எல்லாவற்றுக்கும் மனதின் மூலம் சிகிச்சையளிக்க முடியும் அல்லவா?
.:
மூலம் -ஓஷோ
தமிழில்- பழ.வெள்ளைச்சாமி
#ஹோமியோபதி