Saturday 4 February 2017

மனமது செம்மையானால்... மருந்தது தேவையில்லை


 
மனமே நோயாக இருக்கிறது. இந்த அடிப்படை உண்மையை கிழக்கத்திய நாடுகள் கண்டறிந்து இருக்கின்றன.
 அதே சமயம் மேற்கத்திய நாடுகள், மனம் ஆரோக்கியமாகவும் நோயுடனும் இருக்க முடியும் .என சொல்கின்றன.
.
மேற்கத்திய மனோதத்துவவியல் இதைச் சார்ந்திருக்கிறது. மனம் என்பது ஆரோக்கியமாகவும், இருக்க முடியும் அல்லது நோயுற முடியும். ஆனால் கிழக்கத்திய நாடுகள் மனம் என்பது அது இருக்கிறபடியே அப்படியே நோயாக இருக்கிறது, அது ஆரோக்கியமாக ஆக முடியாது என்று கூறுகிறது. எந்த மன நல மருத்துவரும் உதவ முடியாது. உச்சகட்டமாக நீங்கள் இயல்பாகவே நோயுறச் செய்ய முடியும். ஆகையால், மனதில் இரண்டு வகையான நோய்கள் இருக்கின்றன. அது இயல்பாகவே நோயுற்று இருக்கிறது. அதாவது சுற்றியுள்ளவர்கள் நோயுற்று இருப்பது போலவே அதுவும் அதுவாக நோயோடு இருக்கிறது. அல்லது இயல்பு மீறி நோயாக இருக்கிறது. அதாவது நீங்கள் ஏதோ அபூர்வத் தன்மையோடு இருக்கின்றீர்கள். உங்களிடையே நோய் சாதாரணமானதாக இருக்கவில்லை அது பிரத்தியோகமானது. உங்களுடைய நோய் தனியானது. எல்லோருக்கும் பொதுவானது இல்லை. அதுமட்டுமே வேறுபாடாகும். மனது இயல்பாக நோயுற்று இருக்கிறதோ அல்லது இயல்பு மீறி நோயோடு இருகிறதோ ஆனால் எப்போதும் நோயோடு இருக்கிறது. அது ஆரோக்கியமாக இருக்கவில்லை. ஏன்?
 .
கிழக்கத்திய நாடுகள் சொல்கிறது அதாவது மனம் இயல்பிலேயே ஆரோக்கியமற்றதாக உள்ளது.
 .
ஆரோக்கியம் என்ற வார்த்தை மிகவும் அழகானது. இது முழுமை என்ற வேர் சொல்லில் இருந்து வந்துள்ளது. ஆரோக்கியம், குணமாதல், முழுமை மற்றும் புனிதம் என்ற வார்த்தைகள் எல்லாமே அதே வேர் சொல்லில் இருந்து வந்தவைதாம். மனமானது ஒரு போதும் ஆரோக்கியமாக இருக்க முடியாது. ஏனெனில் அது ஒருபோதும் முழுமையாக இருந்ததில்லை. மனமானது எப்போதும் பிளவுபட்டிருக்கிறது. அதனுடைய அடித்தளமே பிளவோடு இருப்பதுதான். அது முழுமையாக இருக்க முடியாதபோது அது எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும்? மேலும் அது ஆரோக்கியமானதாக இல்லாதபோது அது எப்படி புனிதமானதாக இருக்க முடியும்? எல்லா மனங்களுமே புனிதமற்றதுதான். புனிதமான மனம் என்று அப்படி ஒன்றும் கிடையாது. ஒரு புனிதமான மனிதன் என்பவன் மனம் இல்லாமல் இருப்பவன். ஏனெனில் அவன் பிரிவினை இல்லாமல் வாழ்கிறான்.
.
..
ஒரு நோய் அல்லது எந்த நோயும் முதலில் மனிதன் ஆழத்திலிருந்துதான் தோன்றுகின்றன. மேலும் அதன் பிறகுதான் உடலை நோக்கி நகர்கிறது. அது உடம்பில் தோன்றுவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் அது நீண்ட தூரமாக இருக்கிறது.
 ..
நோய் மனதில் இருக்கும்போது அறியப்படாமல் இருக்கிறது. எப்போது அது உடம்பின் வேரில் பலமாக அடிக்கிறதோ அப்போதுதான் உணரப்படும். நீங்கள் நோயை எப்போதும் உடம்பில்தான் உணர்வீர்கள். ஆனால் அது எப்போதும் மனதில்தான் தொடங்குகிறது. ஆனால், அப்போது உணர்வதில்லை. ஆகையால் அந்த நிலையில் அதை நீங்கள் ஒன்றும் செய்வதற்கு இயலாது. அது எப்போது மனதிலிருந்து உடம்பிற்கு வருகிறதோ, அப்போதுதான் சில உதவிகளுக்கு மருத்துவரை நாட ஆரம்பிக்கின்றீர்கள்.
 ..
மருத்துவர் அதை உடம்பில் பார்க்கின்றார். ஆகவே அந்த உடம்பிற்குச் சிகிச்சை அளிக்க ஆரம்பிக்கின்றார். அது உடம்பில் இருக்கும்பொழுது சிகிச்சையளிப்பதால் அது வேறு ஒரு நோயாக வடிவெடுக்கிறது. ஏனெனில், அந்த நோய் எங்கே தோன்றியதோ அந்த ஆதார மையத்திற்கு சிகிச்சையளிக்கப்படுவதில்லை. இவ்வாறு செய்வதால், நீங்கள் விளைவை மாற்றுகிறீர்கள். ஆனால் அடிப்படைக் காரணத்திற்கு சிகிச்சை அளிப்பதில்லை. இதற்குப் பதிலாக நீங்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தினால், அப்போது நோயான உடம்பில் இருந்து உடனடியாக மறைந்து விடுகிறது.
..
நவீன ஆய்வானது எப்படி மன ஆற்றலை தூண்டுவதன்மூலம் மனதில் மாற்றத்தைக் கொண்டுவந்தால், ஒவ்வொரு நோயும் நிலை மாறுகிறது, மாற்றப்பட்டு குணப்படுத்தப்படுகிறது என்று ஒவ்வொரு நோயிலும் நிரூபித்து இருக்கிறது. அதேபோல், மனதில் மாற்றம் என்பதுதான் நோய் என்பதும் உண்மையாகிறது. மனது, மன ஆற்றல் தூண்டுவதை ஏற்றுக் கொள்ளும்போது நோய் உருவாக்கவும்படுகிறது.
.
.
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு ஒருவர் ஒரு முக்கியமான கட்டுரையை அனுப்பியிருந்தார். அதில் கலிபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவர், கற்பனையில் மட்டுமே பல கான்சர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து இருக்கிறார். இது கதவைத் திறந்து விட்டதற்கான முதல் அறிகுறி... ஒரு துயரரை அல்ல பல துயரர்களை நலமாக்கியிருக்கிறார். அவர் செய்ததெல்லாம் துயரர்களை கற்பனை செய்யச் சொல்கிறார். அதாவது உடம்பில் உள்ள ஆற்றல்கள் எல்லாம் தொண்டைக்குச் செல்கிறது. தொண்டைச் சுரப்பிகள் அந்த ஆற்றலால் தாக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அதாவது உடம்பின் பல பகுதிகளில் இருந்து புறப்பட்ட அம்புகள் தொண்டையை நோக்கிச் சென்று நோயைத் தாக்குகின்றன. இப்போது மூன்று அல்லது நான்கு வாரங்களில் சுரப்பியானது வெறுமனே எந்தவித அடையாளத்தையும் விட்டுச் செல்லாமல் மறைந்து விடுகிறது. ஒரு கான்சர் குணப்படுத்த முடியாததாக எண்ணப்படுகிறது.
கான்சர் என்பது ஒரு நவீன நோய். இது வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம், மன இறுக்கம் மற்றும் கவலைகளால் தோன்றச் செய்கிறது. உண்மையில் சொல்லப் போனால் இது நாள் வரைக்கும் உடம்பின் மூலம் இதற்கு குணம் என்பது கிடையாது. கான்சருக்கு மனதின் வழியாக சிகிச்சையளிக்க முடியும் என்றால் அப்போது எல்லாவற்றுக்கும் மனதின் மூலம் சிகிச்சையளிக்க முடியும் அல்லவா?
.:
மூலம் -ஓஷோ
தமிழில்- பழ.வெள்ளைச்சாமி
#ஹோமியோபதி

No comments:

Post a Comment