சில மாதங்களுக்கு முன்பு ஒர் இளைஞன் என்னிடம் வந்தார். அவருக்கு ஆஸ்துமா நோய். அவருக்கு இந்த நோய் 6 வருடங்களாக இருப்பதாகக் கூறினார்.
அவருடைய நோயையும், அகநிலை முதன்மைக் குறிகளையும், புறநிலை முதன்மைக் குறிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அவருக்கு ஒரு மருந்து தேர்வு செய்து கொடுத்தேன். ஆனால்அவருக்குச் சரியான மாற்றம் ஏற்படவில்லை என்று இரண்டு வாரத்தில் திரும்பி வந்தார்.
நான் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்த துயரர் ‘சரியில்லை’ என்று கூறியவுடன் எனக்குக் கொஞ்சம் மனச் சோர்வு உண்டாகியது.
நான் மறுபடியும் அவருடைய கேஸை ஆய்வு செய்தேன்.
""""தம்பி நீங்க இப்ப என்ன செய்றீங்க ?""
""""நான் BE. கம்ப்யூட்டர் படிக்கிறேன்"".
இதை நீங்கள் விரும்பிப் படிக்கிறீர்களா? அல்லது வீட்டில் படிக்கச் சொன்னாங்களா?
""""இது விருப்பம் உண்டு, விருப்பம் இல்லைங்கிறதைப் பற்றியதாக இல்லை. ஏதே கம்ப்யூட்டர் படிச்சா வேலை கிடைக்கும் என்றுதான் படிக்கிறேன்""
சரி படித்துவிட்டு என்ன செய்யலாம்னு உத்தேசம்?
அமெரிக்கா போகனும்.
ஏன் இங்கே நல்ல வேலை கிடைக்காதா?
கிடைக்கும். ஆனால் சம்பள என்ன சார் தரப் போறாங்க?கூடப் போனா ரூ.10,000/- தருவாங்க. இதை வைத்து என்ன செய்வது?
என்ன தம்பி! ஆரம்பத்திலே இது நல்ல சம்பளம்தானே?
இதை வைச்சு என்ன சார் பண்ணுவது? இதுவே அமெரிக்காவா இருந்தா ரூ. 1 1/2 இலட்சம் சம்பளம் கிடைக்கும்.
என்னதான் அமெரிக்காவில் சம்பளம் அதிகம் கொடுத்தாலும், நம்ம நாட்ல இருக்கிறாப்போல இருக்குமா தம்பி?
நாடு இருக்கட்டும் சார், பணம் வேணும் சார்.
என்ன தம்பி பணத்திற்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறீங்க?
பணம் இல்லாவிட்டால் எவன் சார் மதிக்கிறான்? நல்லா பணம் சம்பாதிச்சு நல்ல பங்களா, கார் எல்லாம் வாங்கனும் சார். அப்பத்தான் நமக்குன்னு ஒரு அந்தஸ்து கிடைக்கும். எல்லாத்துக்கும் பணம் தான் சார் வேணும்.
இப்போது இவருடைய பேச்சிலிருந்து இவரைப் புரிந்து கொண்டேன்.
இவருக்கு வேண்டியது அந்தஸ்து, பங்களா, கார், ஆடம்பர வாழ்க்கை எல்லாவற்றிற்கும் பணம்.
மேலும் இவரை அணுகிப் பார்த்ததில் இன்னும் பல விவரங்கள் கிடைத்தன. இப்போது அவரை யார் என்று நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
இவரை யார் என்று புரிந்து கொண்டு அந்த மருந்தைக் கொடுத்த பின்பு அவருக்கு ஆஸ்துமா உடனடியாக நின்று விட்டது. அதற்குப் பிறகு ஆறு மாதம்
ஆகயும் இன்னும் ஆஸ்துமா வரவே இல்லை.
மற்றவர்கள் தம்மை """"வசீகரமற்றவர்கள்"" என்று நினைத்து விடுவார்கள் என்ற பயம் இவருக்கு இருந்தது. இவருடைய சமூக அந்தஸ்து குறித்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பயப்படுவார். இந்த உலகத்திற்குப் பிரகாசமாகத் தெரிவது போன்ற ஆடம்பரமான வேலையில் அமர விரும்புகிறார். தம்மை மற்றவர்கள் மட்டமாக நினைத்து விடுவார்கள் என்ற பயம். """"என்னுடைய அந்தஸ்து குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? போதிய பணம் உள்ளதா? நான் பார்ப்பதற்கு வசீகரமாக உள்ளேனா?"" போன்ற கேள்விகள் இவருக்கு எழுந்துகொண்டே இருந்தன.
இவருக்கு தாம் ஏழையாகி விடுவோம் என்ற பயம். பணத்தில், அந்தஸ்த்தில், அழகில், வசீகரத்தில் குறைந்து விடுவோமோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. இவருக்கு எதிலும் முடிவு எடுக்க முடியாமல் இருப்பதிலிருந்து இவர் பாதுகாப்பற்ற தன்மையால் பயப்படுகிறார் என்று விளங்கியது.
மற்றவர்கள் குறை சொன்னால் இவர் மிகவும் பாதிக்கப்படுவார். இவரை மற்றவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற பயம். வாழ்க்கையில் எந்தெந்த வகையில் வசீகரமாக இருக்க முடியுமோ அந்த வழி முறைகளையெல்லாம் பின்பற்றிப் பார்ப்பார். அவருடைய எண்ணம், பகட்டான பதவி, அந்தஸ்து பற்றியே அதிகமாக இருக்கும். நாம் கவர்ச்சிகரமான வேலையில் இருக்க வேண்டும் என நினைத்தார். பார்ப்பதற்கு நேர்த்தியாகவும், கவர்ச்சியாகவும் தாம் தோன்ற வேண்டும் என்று விரும்புவார். இந்த சமூகத்தில் எடுப்பாக, பார்வைக்கு அழகாக, ஒருவரை கவரக்கூடிய அளவுக்கு வசீகரமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். அவருடைய நினைப்பு எல்லாம் பணத்தைப் பற்றித்தான். அதிகமாக பணம் இருந்தால் சமூகத்தில் மதிக்கப்படுவோம் என்ற எண்ணம். கார் வாங்க வேண்டும், பிரகாசமான ஆடை, வீடு முதலியவை வேண்டும். அப்போதுதான் மற்றவர்களைக் கவர முடியும் என்று நினைப்பவர்.
நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல அழகுள்ளவர்களைப் பார்க்கும்போதெல்லாம் தாம் மட்டமாக இருப்பதாக நினைப்பார்.
இப்படிப்பட்டவரிடம் உள்ள பயமும், பாதுகாப்பின்மையும் பல விளைவுகளுக்குக் காரணமாக இருக்கின்றன. முதலில் அவர் மற்றவர்களிடம் பழகுவதைக் குறைத்துக் கொள்வார். மற்றவர்கள் இவரைப் பற்றிக் கவலைப்படாதது போல பாசாங்கு செய்வார். எல்லாத் தொடர்புகளையும் தவிர்த்து விடுவார்.
இவருக்கு தாம் பிரகாசமாகவும், மினுமினுப்பாகவும் இருக்க உதவுகின்ற பொருளை இழந்து விடுவோம் என்ற பயம் இருக்கும். குறிப்பாக பணத்தை இழந்து விடுவோம் என்ற பயம் இருக்கும். ஏனெனில், அது தான் இவருக்கு நலமான ஆடை, அணிகலன்கள், பளபளப்பான கார் முதலியவை வாங்க உதவும்.
இவருக்கு பளபளப்பான தோற்றம் போய் விடுமோ என்ற பயம் இருக்கும். இவருடைய தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார். எடுப்பான தோற்றம் இருந்தால்தான் பொது மக்கள் மத்தியில் பகட்டாக திரிய முடியும் என்று எண்ணுவார்.
அவர் தம் பாதுகாப்பும், ஆதரவும் ஸ்திரமற்றதாகவும், நம்ப இயலாததாகவும் இருப்பதாக உணர்வார். அதனால் முழுமையான பாதுகாப்பைக் கடுமையாகவும், உறுதியாகவும் இருப்பதன் மூலம் பெற முடியும் என்று எண்ணுவார்.
மேலும் ஏதோ இழப்பு ஏற்படப் போவதாக உணர்வார். தொழில் நொடித்து விடப் போதாகவும், அதனால் எல்லாப் பணத்தையும் இழந்து விட நேரிடும் என்று பயப்படுவார். பணம் ஒன்றுதான் இவருக்கு பாதுகாப்பு அளிக்கும் என்றும், எவ்வளவுக்கெவ்வளவு பணம் சேமிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு எல்லா பயத்தையும் போக்க முடியும் என்றும் உணர்வார்.
இவருடைய பாதுகாப்பற்ற தன்மையை இவரின் உறவு முறைகளிலும் காண்பார். இவர் உறவுகள் ஸ்திரமற்றதாகவும், இவர் சார்ந்துள்ள உறவு முறை முறிந்துகூட போகும் என்றும் எண்ணுவார். இதனாலேயே சுதந்திரமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்வார். இவர் முற்றிலும் சுதந்திரமானவராகவும், பலமானவராகவும் இருப்பார். இவருக்குப் பல நண்பர்களோடும், மக்களோடும் தொடர்பு இருந்தாலும், இவர் தன்னைச் சார்ந்து இருப்பதையே விரும்புவார்.
இவர் கடும் உழைப்பாளியாகவும், அவருடைய பொருளாதார அபிவிருத்திக்கு பலமான அடித்தளம் அமைப்பவராகவும் இருப்பார். இவரிடம் எப்போதும் தம்முடைய பாதுகாப்பு மற்றும் கட்டுமானங்கள் சிதைந்து விடும் என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும். இந்தப் பேரழிவு இவரை போண்டியாக்கிவிடும் என்று எண்ணுவார்.
இவர் நல்ல ஒழுங்கமைவான செயல்திறம் மிக்கவர். இவருடைய குறிப்புகள் முறையாக எழுதப்பட்டிருக்கும். ஒரு விஷயத்தைக் கருத்துக்களின் அடிப்படையில் வகைப்படுத்தி முழுமையாக வரிசைப்படுத்தி சொல்லக் கூடியவர். எழுதுகின்ற விஷயத்தை ஒரு தாளின் குறைவான பகுதியில் எழுதி விட்டு எஞ்சிய தாளைக் கிழித்து விடுவார்.
அவர் அவருடைய சொத்துக்களையும், உடைமைகளையும் நன்கு பத்திரமாக வைத்துக் கொள்வார். அவர் உடல் நலத்தையும், தொழிலையும் சீராகப் பராமரிப்பார். உறுப்பு படிப்படியாக செயல் இழக்கும் தன்மையான நோய்கள் உருவாகும். (உதாரணம் கண்புறை நோய், எலும்பு மூட்டு வேக்காடு நோய்) தம் உறுப்பு முழுமையாகப் பழுதடைந்து விட்டால் என்ன செய்வது என்பது பற்றி சதா சிந்தித்துக் கொண்டே இருப்பார். முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்வார். அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லாத போதும் பாதுகாப்பு நடவடிக்கையாக சிகிச்சையைத் தொடர்வார். அவர் சொல்வார் """"அது சரி, இழந்த பகுதி போகட்டும், இனிமேல் இருப்பதையாவது இழந்து விடாமல் இருப்பதற்கு சிகிச்சை அளியுங்கள்"" என்பார்.
இவருக்கு தம் உறவினர்கள் இறந்து போவது போன்ற கனவுகள் தோன்றும். ஏனெனில் இவர் பொருளாதார ரீதியாக யாரைச் சார்ந்து இருக்கிறாரோ அவர் இவரைக் கைவிட்டு விடுவார் என்ற பயம் இருக்கும். அன்பும், பராமரிப்பும் செலுத்தும் நபர்கள் கைவிட்டு விடுவார்கள் என்ற பயம் இருக்கும்.
இவர்பொருளாதார ரீதியாகவும், உறவு முறையிலும், பாதுகாப்பாக இருப்பதற்கான முயற்சியில் தோல்வி அடையும்போது, இவர் முழுமையாக, உறுதி குலைந்து முடிவெடுக்க முடியாத, எளிதில் பாதிப்படையும் தன்மையுடன் உதவியற்றவராவார். மனதில் சோர்வு ஏற்பட்டு ஊக்கம் குறைந்து எல்லாவற்றையும் இழந்த நிலைக்கு வந்து விடுவார்.
இப்போது இவர் யாரென்று தெரிகிறதா?
..
..
....
......?????????
இவர் தான் கல்கேரியா ஃப்ளோர்
கல்கேரியா ஃப்ளோரின் கரு:
Calcarea
What do others think
Sensitive to criticism
Insecurity
Shyness
Fears
Protection
Withdrawal
+
Fluor
Glamour and glitter
Money, cars, clothes
Sex
Hard, hurried, fluent
Psychopathic
Superficial contacts
calc flour
@jan scholten
HOMOEOPATHY AND MINERALS
# ஹோமியோபதி
No comments:
Post a Comment